Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கோவில் நிர்வாகிகள் கோஷ்டி பூசல்: ... நல்லூரில் அர்ச்சுனன் தபசு நல்லூரில் அர்ச்சுனன் தபசு
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருத்தணி சுப்ரமணியர் கோவில் கும்பாபிஷேகம்
எழுத்தின் அளவு:
திருத்தணி சுப்ரமணியர் கோவில் கும்பாபிஷேகம்

பதிவு செய்த நாள்

02 ஜூன்
2017
12:06

திருத்தணி : சுப்ரமணிய சுவாமி கோவில் மற்றும் ஷீரடி சாய்பாபா ஆகிய கோவில்களில், நேற்று, கும்பாபிஷேக விழா நடந்தது. இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர். திருவாலங்காடு ஒன்றியம், ராமாபுரம் ஊராட்சி யில் உள்ள ராமலிங்காபுரம் கிராமத்தில் புதிதாக வள்ளிதேவசேனா சமேத சுப்ரமணிய சுவாமி கோவில் கட்டி முடிக்கப்பட்டது.

120 கலசங்கள்: இக்கோவிலில், மகா கும்பாபிஷேக விழா, நேற்று முன்தினம் விநாயகர் பூஜையுடன் துவங்கியது. இதற்காக, கோவில் வளாகத்தில், மூன்று யாகசாலைகள், 120 கலசங்கள் அமைக்கப்பட்டன. நேற்று, அதிகாலை 5:30 மணிக்கு, யாக பூஜை, அவபிருத யாகம், கலச உத்தாபானம், காலை, 8:00 மணிக்கு கலசங்கள் ஊர்வலமும், தொடர்ந்து கோவில் கோபுரம் மற்றும் வள்ளி தேவசேனா சமேத சுப்ரமணிய சுவாமிக்கு கலசநீர் ஊற்றி மகா கும்பாபிஷேகம் நடந்தது. பின், கலசநீர் அங்கு கூடியிருந்த பக்தர்கள் மீது தெளிக்கப்பட்டது. காலை, 10:00 மணிக்கு, மூலவருக்கு மகா அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. விழாவில், ஞானப்பிரகாச தேசிக பரமாச்சார்ய சுவாமி, (தொண்டை மண்டல ஆதினம், 232ம் பட்டம்) முன்னாள் முருகன் கோவில் சேர்மன் ஈஸ்வரப்பன் உட்பட ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.

கணபதி ஹோமம்:
அதே போல், திருத்தணி ஒன்றியம், தலையாறிதாங்கல் ஷீரடி சாய்பாபா கோவிலின் நுழைவு வாயில் கும்பாபிஷேக விழா, நேற்று முன்தினம், கணபதி ஹோமத்துடன் துவங்கியது. நேற்று காலை, நான்காம் கால யாக பூஜை, காலை, 10:30 மணிக்கு, கலசங்கள் ஊர்வலமாக புறப்பட்டு நுழைவு வாயில் மற்றும் மூலவர் சாய்பாபா, பாலமுருகர், விநாயகர், கோவில் வளாகத்தில் உள்ள அனைத்து சன்னதிகளிலும், கலசநீர் ஊற்றி மகா கும்பாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடந்தன.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
புதுச்சேரி: சனிப் பெயர்ச்சியையொட்டி மொரட்டாண்டி சனீஸ்வரர் கோவிலில் வரும் மார்ச் 6ம் தேதி மகா யாகம் ... மேலும்
 
temple news
அரியலூர்; ஜெயங்கொண்டம் அருகே உள்ள கங்கை கொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோவிலில் ஜப்பானை சேர்ந்த மிகவும் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் தை பவுர்ணமியையொட்டி மூன்று நாட்கள் நடந்த ... மேலும்
 
temple news
பாலக்காடு; கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்தின் பாரதப்புழா நதிக்கரையில் நடக்கும் மஹாமக கும்பமேளா, ... மேலும்
 
temple news
வடலூர்; வள்ளலார் சித்தி பெற்ற மேட்டுக்குப்பம் சித்தி வளாகத்தில், திருஅறை தரிசனம் நடந்தது.கடலூர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar