பதிவு செய்த நாள்
03
ஜூன்
2017
12:06
உத்திரமேரூர்: உத்திரமேரூர் கிழக்கு மூலையில் அமைந்துள்ள ஆகாய கங்கையம்மன் கோவில், 77ம் ஆண்டு திருவிழா, கோலாகலமாக நடந்தது. உத்திரமேரூர் பகுதியில் உள்ள, ஆகாய கங்கையம்மன் கோவிலுக்கு, ஆண்டுதோறும் சித்திரை மற்றும் வைகாசி மாதத்தில் திருவிழா நடப்பது வழக்கம்.அதன்படி, இந்தாண்டிற்கான விழா, 28ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. காலை, 6:00 மணிக்கு, அம்மனுக்கு அபிஷேகம் நடைபெற்றது. 10:00 மணிக்கு, மலர் அலங்காரத்தில் அம்மன் குடம் வீதியுலாவும், பகல், 1:00 மணிக்கு கூழ்வார்த்தல் நிகழ்ச்சியும் நடந்தது. 1,000 பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.இதில், நுாற்றுக்கணக்கான பக்தர்கள், அம்மனுக்கு தீபம் ஏற்றி வழிபட்டனர்.