ராஜபாளையம்: ராஜபாளையம் கோதண்டராமர் கோயில் கும்பாபிஷேக விழா ஜூன் 1ல் முதல் யாகசாலை நிகழ்ச்சிகளான பகவத் ப்ரார்த்தனை, அங்குரார்ப்பணம், மருந்து சாற்றுதல், பூர்ணாஹூதி, ேஹாமங்களுடன் துவங்கியது. நேற்று முன்தினம் காலை 6 மணிக்கு முதல் த்வார பூஜை, பாலிகாராதனம் நடைபெற்று காலை 11:15 மணிக்கு மகா கும்பாபிேஷகம் நடந்தது. அன்னதானம் நடந்தது. கும்பாபிஷேகம் மற்றும் யாகசாலை பணிகளை திருக்கோஷ்டியூர் வாசுதேவ பட்டாச்சார்யர், ஸ்ரீரங்கம் சிருதப்ரகாசிகா பட்டர், கோயில் அர்ச்சகர் சுந்தரராஜ ஆச்சார்யர் செய்தனர். ஏற்பாடுகளை தர்மகர்த்தா ஸ்ரீனிவாசராஜா, சிங்கராஜா கோட்டை ராஜூக்கள் தலைவர் ராம்சிங்ராஜா, திருப்பணி கமிட்டி தலைவர் ராஜேந்திர ராஜா செய்தனர்.