பதிவு செய்த நாள்
14
ஜூன்
2017
01:06
தர்மபுரி: சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு, தர்மபுரி எஸ்.வி.,ரோடு சாலை விநாயகர் கோவிலில், அதிகாலை, 6:00 மணிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜை நடந்தது. காலை, 7:00 மணிக்கு, மூலவருக்கு வெள்ளி கவசம் சாத்தப்பட்டு, ரூபாய் நேட்டுகளால் அலங்கரிக்கப்பட்ட பின், பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனர். தொடர்ந்து, விநாயகர் உற்சவர் ஊர்வலம் நடந்தது. இதில், எஸ்.வி., ரோடு, கடைவீதி, மகாத்மா காந்தி சாலை, வெளிபேட்டை தெரு உள்ளிட்ட முக்கிய வீதிகளின் வழியாக ஊர்வலம் சென்று, மீண்டும் கோவிலை வந்தடைந்தது. ஊர்வலத்தின் போது, உற்சவ விநாயகர், சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதேபோல், இலக்கியம்பட்டி சித்தி விநாயகர் கோவில், அன்னசாகரம் கோடி விநாயகர் கோவில், வெண்ணாம்பட்டி ரயில்வே கேட் குபேர கணபதி கோவில், நெசவாளர் காலனி சக்தி விநாயகர் கோவில், பாலக்கோடு பால்வண்ணநாதர் கோவில், காரிமங்கலம் ராஜகணபதி கோவில் உள்பட, மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் உள்ள விநாயகர் கோவில்களில், நேற்று சிறப்பு பூஜை நடந்தது.
* இதேபோல், கிருஷ்ணகிரி புதுப்பேட்டை சப்ஜெயில் ரோட்டில் உள்ள சித்தி விநாயகர் கோவிலில் நேற்று சங்கடஹர சதுர்த்தி நடந்தது. இதையொட்டி, நேற்று மாலை, 6:45 மணிக்கு சிறப்பு பூஜை நடந்தது. இதில், 108 குடம் பால் அபி?ஷகம் செய்யப்பட்டது. பின்னர் புஷ்ப அலங்காரத்தில் விநாயகர் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.