பதிவு செய்த நாள்
14
ஜூன்
2017
06:06
ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டம் தேவிபட்டினம் நவபாஷான கோயிலில் கோடை வெப்பம் குறையாததால், சுற்றுலா பயணிகள் வருகை குறைந்து வெறிச்சோடியது.
தேவிபட்டினம் கடற்கரை பகுதியில் நவபாஷான தீர்த்தம் உள்ளது. இங்கு கடற்கரை ஒட்டிய பகுதியில் நிவக்கிரகங்களின் சிலைகள் உள்ளன. இதனை வணங்கி பரிகார பூஜை செய்து, இங்குள்ள தீர்த்தத்தில் நீராடினால், தோஷங்கள் நிவர்த்தியாகும், என பக்தர்கள் நம்பிக்கையாகும். இப்பகுதிக்கு வெளி மாநிலங்களில் இருந்தும் தமிழகத்தின் அனைத்துப்பகுதிகளிலிருந்தும் பக்தர்கள் வருகைதருகின்றனர். ராமேஸ்வரத்திற்கு வருகை தரும் சுற்றுலாப்பயணிகள் அதிகளவில் இங்கு வருகை தருகின்றனர். தினசரி ஆயிரக்கணக்கான பக்தர்கள் நவபாஷான தீர்த்தத்திற்கு வருகை தருவார்கள் ஒரு நாளில் குறைந்த பட்சம் 5 ஆயிரம் முதல் 10 ஆயிரம் பக்தர்கள் வரை வருகை தருவார்கள். ஆடி அமாவாசை, மாஹாளய அமாவாசை, தை அமாவாசை ஆகிய நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள்.
கோடை வெப்பம் அதிகளவில் உள்ளதால், கடற்கரை பகுதியில் வெப்பம் அதிகரித்து இருப்பதாலும், சுற்றுலாப்பயணிகள், பக்தர்கள் வருகைஇல்லாமல் வெறிச்சோடிய நிலையில் உள்ளது. பொதுவாக செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி ஆகிய நாட்களில் அதிகளவு பக்தர்கள் வருகை தருவார்கள். விடுமுறை தினமான சனி, ஞாயிற்றுக்கிழமை கூட பக்தர்கள், பயணிகள் கூட்டம் அதிகமாக இருக்கும். பள்ளி திறந்ததால், கோடை வெப்பம் காரணமாகவும் பக்தர்கள், பயணிகள் வருகை மிகவும் குறைந்து விட்டது. இதன் காரணமாக நவபாஷான தீர்த்தப்பகுதி வெறிச்சோடி காணப்பட்டது.