பதிவு செய்த நாள்
16
ஜூன்
2017
12:06
குளித்தலை: குளித்தலை அடுத்த, பாப்பக்காபட்டி பஞ்சாயத்து, குளத்தூரில் விநாயகர், முருகன், மகாமாரியம்மன், காளியம்மன், பாம்பலம்மன் கோவில்கள் தனித்தனியே உள்ளன. இந்த கோவில்களுக்கு, பொதுமக்கள் சார்பில் திருப்பணிகள் நடந்தன. நேற்று, இந்த கோவில்களுக்கு கும்பாபிஷேகம் செய்ய, குளித்தலை காவிரி நதியில் இருந்து, பால் குடம், தீர்த்தக் குடங்கள் எடுத்து வரப்பட்டு, கோவிலில் வைத்து சிறப்பு அபிஷேகம் செய்தனர். பின்னர் விக்னேஸ்வரர், வாஸ்து சாந்தி உள்பட பல்வேறு யாகசாலை பூஜைகள் நடந்தன. பிறகு, கும்பங்களுக்கு சிறப்பு பூஜைகள், ஹோமங்கள் செய்து, சிலைகளுக்கு மருந்து சாத்துதல் நடந்தது. பின்னர், விநாயகர், முருகன், மகாமாரியம்மன், காளியம்மன், பாம்பலம்மன் கோவில்களுக்கு நேற்று முன்தினம் கும்பாபிஷேகம் நடந்தது. சிறப்பு அர்ச்சனை தீபாராதனை, பிரசாதம் வழங்குதல் ஆகியன நடந்தது. குளித்தலை, பஞ்சப்பட்டி,தோகைமலை பகுதிகளை சேர்ந்த மக்கள் கலந்து கொண்டனர்.