பொள்ளாச்சி: அங்கலக்குறிச்சி தாடகை நாச்சியம்மன் அடிவாரம் ஆத்மநாதவனம் சமுக்தியாம்பிகை காலசம்ஹார பைரவர் கோவிலில், தேய்பிறை அஷ்டமி விழா நடந்தது. விழாவையொட்டி, காலை 11:00 மணிக்கும், மாலை 5:00 மணிக்கும் காலசம்ஹார பைரவருக்கு சிறப்பு அபிேஷக ஆராதனைகள் நடந்தன. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஏராளமான பக்தர்கள், பங்கேற்று பூசணிக்காய் தீபம் ஏற்றி பைரவரை வழிபாடு செய்தனர்.