பதிவு செய்த நாள்
21
ஜூன்
2017
11:06
திருவள்ளூர்: ஏகாதசியை முன்னிட்டு, பெருமாள் கோவில்களில், நேற்று, திருமஞ்சனம் நடந்தது. திருவள்ளூர், வீரராகவர் கோவிலில், ஏகாதசியை முன்னிட்டு, உற்சவர் பெருமாளுக்கு, காலை 9:30 மணிக்கு, திருமஞ்சனம் நடைபெற்றது. பின், மலர்களால் அலங்கரிக்கப்பட்டு, ஸ்ரீதேவி, பூதேவி சமேத உற்சவர் வீரராகவர், மாலை 5:30 மணிக்கு, மாட வீதிகளில், வீதி உலா வந்தார். திருவள்ளூர், சத்திய மூர்த்தி தெருவில், பத்மாவதி சமேத பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவிலில், உற்சவருக்கு திருமஞ்சனம் நடந்தது. பூங்கா நகர், சிவ-விஷ்ணு கோவிலில், ஜலநாராயணருக்கும், கொண்டமாபுரம் கன்னிகா பரமேஸ்வரி கோவிலில், உள்ள ராமருக்கு அபிஷேகம், தீபாராதனை நடந்தது.மீஞ்சூர், அத்திப்பட்டு வைகுண்ட பெருமாள் கோவிலில், பிரபந்த பாராயணத்துடன் பெருமாள் உள் புறப்பாடு நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு, சுவாமி தரிசனம் செய்தனர்.