பதிவு செய்த நாள்
21
ஜூன்
2017
11:06
திருத்தணி : கங்கையம்மன் கோவிலில், நேற்று நடந்த ஜாத்திரை விழாவில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர். திருத்தணி ஒன்றியம், தரணிவராகபுரம், கங்கையம்மன் கோவிலில், ஜாத்திரை விழா நேற்று நடந்தது. விழாவை ஒட்டி, காலை, 8:30 மணிக்கு, கங்கையம்மன் மற்றும் சக்தியம்மன் கோவில் வளாகத்தில், கூழ்வார்த்தல்நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து, மூலவர் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது.மாலை, 4:00 மணி முதல், மாலை, 6:00 மணி வரை, கோவில் வளாகத்தில் திரளான பெண்கள் பொங்கல் வைத்து வழிபட்டனர். தொடர்ந்து, இரவு, 7:30 மணிக்கு, பூ கரகத்துடன், களி மண்ணால் செய்யப்பட்ட கங்கையம்மன் சிறப்பு அலங்காரத்தில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.பின், கும்பம் கொட்டும் நிகழ்ச்சியும், இரவு நாடகமும் நடந்தது. ஜாத்திரை விழாவில், சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து, திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.