Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஜெகந்நாத பெருமாள் கோவில் ... நரசிம்மர் சுவாமி கோவில் தேர் புதுப்பிக்கும் பணி மும்முரம் நரசிம்மர் சுவாமி கோவில் தேர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மழையில் நனைந்து வீணாகும் ஸ்ரீபெரும்புதூர் கோவில் தேர்
எழுத்தின் அளவு:
மழையில் நனைந்து வீணாகும் ஸ்ரீபெரும்புதூர் கோவில் தேர்

பதிவு செய்த நாள்

22 ஜூன்
2017
12:06

ஸ்ரீபெரும்புதுார்: ஸ்ரீபெரும்புதுார் ஆதிகேசவப் பெருமாள் கோவில் தேர், மழையில் நனைந்து, துாசி படிந்து வீணாகுவதால் பக்தர்கள் வேதனை அடைந்துள்ளனர். ஸ்ரீபெரும்புதுாரில் ராமானுஜர் அவதார தலமான, ஸ்ரீ ஆதிகேசவப் பெருமாள் மற்றும் பாஷ்யகார சுவாமி கோவில் உள்ளது. குண்டும், குழியுமான ஸ்ரீபெரும்புதுார் சாலையால், ஆதிகேசவப் பெருமாள் மற்றும் ராமானுஜர் உற்சவ விழாக்களின் போது, கடந்த இரண்டு ஆண்டுகளாக பெரிய தேர் பயன்படுத்தப்படாமல், சிறிய தேர் பயன்படுத்தப்பட்டது. இந்நிலையில், ஸ்ரீபெரும்புதுாரில் ராமானுஜர் அவதரித்த ஆயிரமாவது ஆண்டு விழா, கடந்த ஏப்ரல் மாதம் விமரிசையாக கொண்டாடப்பட்டது. இதற்காக பல லட்சம் ரூபாய் செலவில் பெரிய தேர் புதுப்பிக்கப்பட்டு, வர்ணம் தீட்டப்பட்டது. மேலும், தேர் மீது மழை நீர், துாசி படியாத படி அமைக்கப்பட்டிருந்த தேர் கூரை அகற்றப்பட்டு சாலைகள் சீரமைக்கப்பட்டன.

இதை அடுத்து இரண்டு ஆண்டுகளுக்கு பின் இந்த ஆண்டு தேரோட்டம் நடந்தது. இதனால், பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். இந்நிலையில் தேரோட்டம் முடிந்து, இரண்டு மாதங்கள் முடிய உள்ள நிலையில், இதுவரை தேரின் கூரை இன்னும் அமைக்கப்படவில்லை. திறந்த நிலையில், சாலையோரம் தேர் நிற்பதால், வாகன புகை, வெயில், மழை, துாசி ஆகியவற்றால் தேர் சேதமாகி வருகிறது. எனவே, கோவில் நிர்வாகத்தினர் விரைந்து, தேர் கூரையை அமைத்து, தேரை பாதுகாக்க வேண்டும் என, பக்தர்கள் எதிர்பார்க்கின்றனர். நீண்ட காலத்திற்கு பின், இந்த தேர் சீரமைக்கப்பட்டு, வர்ணம் தீட்டப்பட்டது. தற்போது தேர் கூரை இல்லாததால், வெயில், மழையில் தேர் சேதமாகிறது. இதே நிலை நீடித்தால் தேர் வெகு விரைவில் சேதமாகி விடும். சாலையோரம் உள்ளதால் கனரக வாகனங்கள் தேர் மீது மோதும் அபாயமும் உள்ளது. எனவே, தேர் கூரையை அமைத்து பாதுகாக்க வேண்டும். ராம.வெங்கடேசன், ஸ்ரீபெரும்புதுார்

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை; திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் தீப திருவிழா இனிதே நடைபெற வேண்டி, நகர காவல் ... மேலும்
 
temple news
சிவாஜிநகர்: கார்த்திகை இரண்டாவது சோமவாரத்தை முன்னிட்டு, பெங்களூரு சிவாஜிநகர் காசி விஸ்வநாதேஸ்வரர் ... மேலும்
 
temple news
திருப்புத்தூர்; திருப்புத்தூர் ஒன்றியம் காரையூர் சிவன் கோயிலில் சாமி சிலைகளை மர்மநபர்களால் ... மேலும்
 
temple news
திருப்புத்தூர்; திருப்புத்தூர் திருத்தளிநாதர் கோயில், ந.வைரவன்பட்டி வளரொளிநாதர் கோயில்களில் ... மேலும்
 
temple news
திருப்பதி; திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயில் வருடாந்திர பிரம்மோற்சவத்தில் இன்று மோகினி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar