பதிவு செய்த நாள்
28
ஜூன்
2017
01:06
சேலம்: சேலம், குகை, ராமலிங்க சவுடேஸ்வரி அம்மன், தர்ம மடாலய சமரச சன்மார்க்க சபையில், 121வது ஆண்டு குருபூஜை மகோற்சவ விழா, நேற்று நடந்தது. காலை, 9:30 மணியளவில், கலச பூஜை, சிறப்பு அபிஷேகம் செய்து, தீபாராதனை நடந்தது. குள்ளம்பட்டி, ஆனந்தாஸ்ரமம் மடாதிபதி சச்சிதானந்த ஸ்வாமிகள் கலசபூஜை செய்தார். பகல், 12:00 மணியளவில், ஹம்பி ஹேமகூட காயத்ரி பீட மகா சமஸ்தான பீடாதிபதி தயானந்தபுரி மஹராஜ் ஸ்வாமிகளுக்கு பாதபூஜை, மகேஸ்வர பூஜை செய்து, துறவிகள் மற்றும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. தாம்பரானந்தம் ஸ்வாமிகள், சித்தா பானந்த ஸ்வாமிகள் கலந்து கொண்டனர். மாலை 6:30 மணிக்கு, பீடாதிபதி தயானந்தபுரி மஹாராஜ் ஸ்வாமிகள் பக்தர்களுக்கு அருளாசி வழங்கினார்.