Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
சமரச சன்மார்க்க சபை குருபூஜை ... பண்ணாரி மாரியம்மன் கோவில் பூச்சாட்டு விழா பண்ணாரி மாரியம்மன் கோவில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சபரிமலை ஆராட்டு விழா: கொட்டும் மழையில் கொடியேற்றத்துடன் துவக்கம்
எழுத்தின் அளவு:
சபரிமலை ஆராட்டு விழா: கொட்டும் மழையில் கொடியேற்றத்துடன் துவக்கம்

பதிவு செய்த நாள்

28 ஜூன்
2017
06:06

சபரிமலை: சபரிமலையில் ஆராட்டு திருவிழா  காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. கொட்டும் மழையிலும் ஏராளமான பக்தர்கள் இதில் பங்கேற்றனர்.

சபரிமலையில் 10 நாள் திருவிழா பங்குனி மாதம் நடைபெறும். இந்த ஆண்டு புதிய கொடிமரத்துக்கான பணிகள் நடைபெற்று வந்ததால் பங்குனி மாதத்தில் திருவிழா நடைபெறவில்லை. கடந்த 25-ம் தேதி புதிய தங்க கொடிமர பிரதிஷ்டை நடைபெற்றது. இதை தொடர்ந்து திருவிழா காலை தொடங்கியது.  காலை 8.40 மணிக்கு கொடிப்பட்டத்துக்கு பூஜை தந்திரி கண்டரரு ராஜீவரரு, மேல்சாந்தி உண்ணிகிருஷ்ணன் நம்பூதிரி ஆகியோர் சிறப்பு பூஜை நடத்தினர். தொடர்ந்து கொடிப்பட்டம் மேளதாளத்துடன் கோயிலை சுற்றி பவனியாக எடுத்து வரப்பட்டது. கொடிமரசுவட்டில் தந்திரி கண்டரரு ராஜீவரரு பூஜைகள் நடத்தினார். காலை 9.15 மணிக்கு தங்க கொடிமரத்தில் தந்திரி கண்டரரு ராஜீவரரு கொடியேற்றினார். தொடர்ந்து தீபாராதனை நடைபெற்றது.

ஜூலை இரண்டாம் தேதி ஐந்தாம் திருவிழா முதல் ஒன்பதாம் நாள் விழா வரை ஸ்ரீபூதபலியுடன், யானை மீது சுவாமி பவனி வரும் நிகழ்ச்சி நடைபெறும். ஜூலை ஆறாம் தேதி நள்ளிரவில் சரங்குத்தியில் பள்ளிவேட்டை நடைபெறும். ஏழாம் தேதி மதியம் பம்பையில் ஆராட்டு நடைபெறும். இதற்காக காலையில் உஷபூஜை முடிந்ததும் சுவாமி யானை மீது பவனியாக பம்பைக்கு புறப்படுவார். தொடர்ந்து நடை அடைக்கப்படும். ஆராட்டு பவனி அன்று இரவு சன்னிதானம் வந்ததும் திருக்கொடி இறக்கப்பட்டு விழா நிறைவு பெறும்.  காலையில் சபரிமலையில் மழை தொடர்ந்து பெய்து கொண்டிருந்தது. கொட்டும் மழையிலும் கொடியேற்று விழாவில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தஞ்சாவூர் : பழையாறையில் உள்ள சோழர்கள் காலத்திற்குரிய சோமநாதர் கோவிலின் ராஜகோபுரம் சிதலமடைந்த ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்; மாசி மகா சிவராத்திரி விழா யொட்டி இன்று (பிப்., 10) சுவாமி, அம்மன் கெந்தமாதன பர்வதம் ... மேலும்
 
temple news
பெ.நா.பாளையம்; பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள பாலமலை ரங்கநாதர் திருக்கோயிலில் மகா சுதர்சன ஹோமம் ... மேலும்
 
temple news
பழநி; பழநி கோயிலுக்கு தைப்பூசத்தை முன்னிட்டு மாட்டு வண்டியில் வந்து தரிசனம் செய்து பணிக்கம்பட்டி ... மேலும்
 
temple news
பல்லடம்; பல்லடம் அருகே, பிரத்தியங்கிரா தேவி கோவில் ஆண்டு விழா விமரிசையாக நடந்தது.பல்லடத்தை அடுத்த, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar