Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news நடனபாதேஸ்வரர் கோவிலில் ... கன்னியாகுமரி விவேகானந்தா கேந்திராவில் அன்ன பூஜை கன்னியாகுமரி விவேகானந்தா ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சபரிமலை ஆறாட்டு விழா: யானை மீது சுவாமி வலம்
எழுத்தின் அளவு:
சபரிமலை ஆறாட்டு விழா: யானை மீது சுவாமி வலம்

பதிவு செய்த நாள்

05 ஜூலை
2017
10:07

சபரிமலை: சபரிமலையில் நடந்து வரும் ஆறாட்டு திருவிழாவில், யானை மீது சுவாமி வலம் வரும் நிகழ்ச்சி நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர். நாளை சரங்குத்தியில் பள்ளிவேட்டை நடைபெறுகிறது. நாளை மறுநாள் பம்பையில் ஆறாட்டு நடக்கிறது. சபரிமலையில் புதிய தங்க கொடிமர கும்பாபிஷேகம் ஜூன் 25-ம் தேதி நடந்தது. பின்னர் ஆறாட்டு திருவிழா ஜூன் 28-ம் தேதி காலையில் கொடியேற்றத்துடன் தொடங்கியது.

தினமும் இரவு 9:00 மணிக்கு ஸ்ரீபூதபலியும், ஐந்தாம் நாள் முதல், யானை மீது சுவாமி எழுந்தருளல் நிகழ்ச்சியும் நடக்கிறது. ௨ம் நாள் விழா முதல் மதியம் 12:00 மணிக்கு உற்சவபலி நடக்கிறது. 9ம் நாள் விழாவான நாளை இரவு 9:00 மணிக்கு அத்தாழ பூஜைக்கு பின்னர், சுவாமி பள்ளி வேட்டைக்காக சரங்குத்திக்கு எழுந்தருளுவார். நள்ளிரவில் பள்ளி வேட்டை முடிந்த பின்னர் சன்னிதானம் திரும்பும் சுவாமி, கோயில் முன்புறம் உள்ள மண்டபத்தில் பள்ளி உறங்கும் நிகழ்ச்சி நடக்கும். நாளை மறுநாள் அதிகாலை 5 மணிக்கு நடை திறந்ததும் சுவாமியை கோயிலுக்குள் பூஜிக்கும் நிகழ்ச்சி நடக்கிறது. பின் நெய்யபிஷேகம் நடைபெறும். காலை ஏழு மணிக்கு உஷபூஜைக்கு பின் யானை மீது சுவாமி ஏற்றப்பட்டு, ஆராட்டு பவனி பம்பைக்கு புறப்படும். மதியம் 12:30 மணிக்கு பம்பையில் ஆராட்டு நடைபெறும். மதியம் மூன்று மணிக்கு ஆராட்டு பவனி சன்னிதானத்துக்கு புறப்படும். இரவு 10:00 மணிக்கு சன்னிதானம் வந்ததும் திருக்கொடி விழா நிறைவு பெறும். அத்துடன் நடை அடைக்கப்படும். அதன் பின்னர் ஆடி மாத பூஜைகளுக்காக 16-ம் தேதி மாலை 5:00 மணிக்கு மீண்டும் நடை திறக்கும். 17-ம் தேதி காலை முதல் நெய்யபிஷேகம் நடைபெறும்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
குன்றத்துார்: குன்றத்துார் முருகன் கோவில் திருத்தேர் விழா, இன்று விமரிசையாக நடந்தது. ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்,  கும்பகோணத்தில் தயாரிக்கப்பட்ட 51 அடி உயர, 65 டன் எடையிலான ஐம்பொன் ஆதிபராசக்தி ... மேலும்
 
temple news
காரைக்கால்: காரைக்கால் திருப்பட்டினம் ஜடாயுபுரீஸ்வர் கோவிலில் மாசிமத்திருவிழாவை முன்னிட்டு ... மேலும்
 
temple news
பாலக்காடு; மணப்புள்ளிக்காவு பகவதி அம்மன் கோவில் திருவிழா கோலாகலமாக நடந்தது.கேரள மாநிலம் ... மேலும்
 
temple news
திருப்போரூர்: திருப்போரூர் கந்தசுவாமி கோவில் மாசி பிரம்மோத்சவ தேரோட்டம் இன்று கோலாகலமாக ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar