Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
கருமனூர் அம்மன் கோவில் திருவிழா லக்கசந்திரா ராமலிங்க சவுடேஸ்வரி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பவானியம்மன் கோவிலில் ஆடி விழா துறை அதிகாரிகளின் ஆலோசனை கூட்டம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

05 ஜூலை
2017
01:07

ஊத்துக்கோட்டை: பவானியம்மன் கோவிலில், ஆடி மாத விழா குறித்து, அதிகாரிகளின் ஆலோசனை கூட்டம், எல்லாபுரம் ஒன்றிய அலுவலகத்தில் நடந்தது. தமிழகத்தில் உள்ள அம்மன் கோவில்களில் பெரியபாளையம் பவானியம்மன் கோவில் பழமை வாய்ந்தது. ஆடி மாதம், முதல் ஞாயிற்றுக்கிழமை துவங்கி, 13 வாரங்கள் பல்வேறு மாநிலங்களில் இருந்து, லட்சக்கணக்கான பக்தர்கள் தங்களது குடும்பத்துடன் சென்று, தங்களது நேர்த்திக் கடனை செலுத்தி, அம்மனை வழிபடுவர். பக்தர்களுக்குத் தேவையான வசதிகளை எல்லாபுரம் ஒன்றிய நிர்வாகம் ஒவ்வொரு ஆண்டும் செய்து வருகிறது. இது குறித்து கூட்டம், ஒன்றிய அலுவலகத்தில் நடைபெறும். பல்வேறு துறை அதிகாரிகள் கலந்து கொண்டு, தங்களுக்குத் தேவையான வசதிகள் குறித்து தெரிவிப்பர். இந்த தகவல்களை பெற்றுக் கொண்டு ஒன்றிய அதிகாரிகள் 30 லட்சம் ரூபாய் அளவிற்கு சுகாதாரம் உள்ளிட்ட துறைகளுக்கு செலவழிப்பர். மேலும், ஒவ்வொரு ஆண்டும், கோவில் நிர்வாகத்திடம் இருந்து செலவுத் தொகையை கேட்டு கணக்கு அனுப்பி வைப்பர். இந்த கூட்டங்களில் செய்தியாளர்கள் அனுமதிக்கப்படுவர்.

இந்நிலையில், நேற்று, மதியம், 3:00 மணிக்கு, பவானியம்மன் கோவில் ஆடி மாத விழா குறித்த கூட்டம் எல்லாபுரம் ஒன்றிய அலுவலகத்தில் ஊராட்சிகளின் உதவி இயக்குனர் (தணிக்கை) முத்துக்குமார் தலைமையில் நடந்தது. இதில் ஒன்றிய ஆணையர்கள் சுதா, கிருஷ்ணமூர்த்தி மற்றும் நெடுஞ்சாலை, சுகாதாரம், மின்சாரம், போக்குவரத்து உள்ளிட்ட துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். நேற்று, ஒன்றிய ஆணையர் அறையில் அதிகாரி கலந்து கொண்ட கூட்டம் நடந்தது. பின், இது குறித்து முத்துக்குமார் கூறுகையில், ’ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் வழக்கமான பணிகளை அந்தந்த துறையினர் மேற்கொள்வர். சில ஆண்டுகளாக, கோவில் நிர்வாகம் வழங்க வேண்டிய தொகையை வழங்கவில்லை. ’இந்தாண்டு, 30 லட்சம் ரூபாய், ஆடி மாதம் இரண்டாவது வாரம் வழங்குவதாக கூறியுள்ளனர்’ என்றார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ஆந்திரா;  நந்தியாலில் உள்ள ஸ்ரீசைலம் ஸ்ரீ பிரமராம்பா மல்லிகார்ஜுன சுவாமி வர்ல தேவஸ்தானத்தில் ... மேலும்
 
temple news
வாடிப்பட்டி: பரவை முத்துநாயகி அம்மன் கோயில் புரட்டாசி திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. அம்மனின் ... மேலும்
 
temple news
விஜயநகரா: மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், முதன் முறையாக, ஹம்பிக்கு வந்தார். வரலாற்று பிரசித்தி ... மேலும்
 
temple news
டில்லி; இந்தியா வந்துள்ள மங்கோலியாவின் ஜனாதிபதி குரேல்சுக் உக்னா தனது குடும்பத்தினறுடன் டில்லி ... மேலும்
 
temple news
அன்னுார்: அன்னுார் மன்னீஸ்வரர் கோவிலில் 2 கோடி ரூபாயில் தங்க தேர் அமைக்கும் பணி நடைபெற்று ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar