Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
ஐயப்பன் சாப்பிட்ட அவல் ஐயப்பன் - என்ற பெயர் வரக் காரணம் என்ன? ஐயப்பன் - என்ற பெயர் வரக் காரணம் என்ன?
முதல் பக்கம் » ஐயப்பன் தகவல்கள்
பெரிய சிறிய அம்பலம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

18 நவ
2011
02:11

எருமேலியில் பெரியம்பலம் என்ற பெரிய கோயில், சிறியம்பலம் என்ற இரண்டு கோயில்கள் உள்ளன. சபரிமலை பக்தர்கள் மலையேறும் முன் முதலில் இங்குதான் செல்வர். தாயின் வயிற்று வலியை போக்க புலிப்பால் தேடி ஐயப்பன் காட்டுக்கு சென்ற போது எருமைத்தலையுடன் கூடிய மகிஷியை வதம் செய்த இடம் எருமேலி. எருமை தலை உடைய மகிரிஷியை கொன்றதால் அந்த இடம் தொடக்கத்தில் எருமைகொல்லி என்று அழைக்கப்பட்டது. நாளடைவில் இந்த பெயர் மருவி எருமேலி என்று பெயர் பெற்றது. ஐயப்பன் வில்லும் அம்பும் ஏந்தி நிற்கும் சிலைகள் இந்த கோயில்களில் உள்ளன. பகவதி, நாகராஜா சந்நிதிகளும் அமைக்கப்பட்டுள்ளன. எருமேலியில் பேட்டை துள்ளல் நிகழ்ச்சி மிகவும் பிரசித்தி பெற்றது. சிறிய கோயிலில் பேட்டை கட்டும் பக்தர்கள் பெரிய கோயிலில் வந்து பேட்டை துள்ளலை நிறைவு செய்கின்றனர்.
இங்கு மலைகளின் அதிபதியான சிவபூதகணங்கள் உள்ளனர். அவர்களை வணங்கி கோயிலில் உள்ள தலப்பாறையில் காணிக்கை செலுத்தி கொடுங்காடு வழியாக பயணத்தை தொடர்கின்றனர். மகரவிளக்குக்கு மூன்று தினங்களுக்கு முன்னர் எருமேலியில் நடக்கும் அம்பலப்புழா, ஆலங்காடு ஐயப்ப பக்தர்களின் பேட்டை துள்ளல் பிரசித்தி பெற்றது. இந்தக் கோயில்கள் காலை 5 முதல் 11.30 மணி வரையிலும், மாலை 5 முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும். பெரிய கோயிலில் மாசி மாதம் கார்த்திகை நட்சத்திரத்தில் பிரம்மோற்ஸ்வம் துவ்ஙகி, உத்திரம் நட்சத்திரத்தில் ஆறாட்டு நடக்கிறது. அப்பம், அரவணை முக்கிய பிரசாதம். நீராஞ்சனம், கணபதிஹோமம் இங்குள்ள வழிபாடுகளாகும்.

 
மேலும் ஐயப்பன் தகவல்கள் »
temple news
சுவாமியை கும்பிடுவதில் வணங்குவதில் இரண்டு முக்கியமான முறைகள் உண்டு ஒன்று எங்கும் எதிலும் இறைவன் ... மேலும்
 
temple news
தேங்காய் என்பது நம் உடம்பு, நெய் என்பது நம் ஆத்மா. தேங்காயில் நெய் நிரப்பி இருமுடியில் வைத்து, படியேறி ... மேலும்
 
temple news
சபரிமலைக்கு பெரிய பாதை என்னும் எரிமேலி வனப்பாதையே ஐயப்பன் தன் யாத்திரைக்காகச் சென்ற வழி என்பார்கள் ... மேலும்
 
temple news
தமிழகத்தில் உள்ள வித்தியாசமான சாஸ்தா கோயில்கள் (தமிழக ஐயப்பன் கோயில்கள்) பற்றிய தகவல் இப்பகுதியில் ... மேலும்
 
temple news
கார்த்திகை மாதம் துவங்கியதும், இந்தியாவில் உள்ள ஐயப்ப பக்தர்கள் அனைவரும் ஐயப்ப பக்தியில் மூழ்கிப் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   ஐயப்ப தரிசனம் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar