பதிவு செய்த நாள்
15
ஜூலை
2017
10:07
திருவண்ணாமலை: திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவிலில் ஆடிப்பூர பிரம்மோற்சவம் வரும், 17 ல் கொடியேற்றத்துடன் துவங்குகிறது. திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவிலில் ஆண்டு தோறும் நடக்கும் ஆடிப்பூர பிரம்மோற்சவம், மிகவும் பிரசித்தி பெற்றது. இந்த ஆண்டு ஆடிப்பூர பிரம்மோற்சவம் வரும், 17 ல் கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. அதையொட்டி அன்று, அதிகாலை, 6:01 மணி முதல், 7:30 மணிக்குள் உண்ணாமுலை அம்மன் சன்னதி எதிரில் உள்ள தங்க கொடி மரத்தில் ஆடிப்பூர பிரம்மோற்சவ கொடி ஏற்றப்படுகிறது. அப்போது அலங்கார ரூபத்தில் உண்ணாமுலையம்மன் சமேத அருணாசலேஸ்வரர், பராசக்தி அம்மன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிப்பர். அதை தொடர்ந்து வரும், 25 வரை தினமும் காலை, இரவு நேரங்களில் அலங்கரிக்கப்பட்ட வாகனங்களில் விநாயகர், மற்றும் பராசக்தி அம்மன் அலங்கார ரூபத்தில் மாட வீதியில் உலா வந்து அருள்பாலிப்பர்.