பதிவு செய்த நாள்
25
ஜூலை
2017
12:07
பெங்களூரு: சிவாஜி நகர் நாராயண பிள்ளை தெரு, அங்காள பரமேஸ்வரி கோவிலில், 55ம் ஆண்டு ஆடி கரக திருவிழாவில், நாளை ஆடிப்பூரத்தை முன்னிட்டு சிறப்பு பூஜைகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.சிவாஜி நகர், நாராயண பிள்ளை தெரு, அங்காள பரமேஸ்வரி கோவிலில், 55ம் ஆண்டு ஆடி கர திருவிழாவில், முதல் ஆடி வெள்ளியன்று, அம்மனுக்கு மஞ்சள் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. நாளை ஆடிப்பூரத்தன்று, அதிகாலை, 5:15 மணிக்கு, மஹா அபிஷேகம், சந்தன காப்பு சிறப்பு அலங்காரம், சிறப்பு பூஜைகள் நடைபெறும்.
இரண்டாம் வெள்ளிக்கிழமையான, 28ல், மஞ்சள் அலங்காரம் செய்யப்படுகிறது. இரவில் புஷ்ப கரகம், அங்காள பரமேஸ்வரி பிரகாரம் வலம் வருகிறது. வி.அருண்குமார், புஷ்ப கரகம் எடுக்கிறார். ஆடி ஞாயிற்றுக்கிழமையான, 30ம் தேதி காலையில் கும்ப பூஜை, கூழ் ஊற்றுதல், பகல், 12:30 மணிக்கு ரக் ஷ பந்தனம் விஜர்சனம் நடைபெறும். மூன்றாம் வெள்ளியான, ஆக., 4ல் விபூதி அலங்காரம்; நான்காம் வெள்ளியான, ஆக., 11ல், கஸ்துாரி குங்கும அலங்காரம் செய்யப்படுகிறது. ஆடி வெள்ளி மற்றும் ஆடி ஞாயிற்றுக்கிழமைகளில், அதிகாலை, 5:15 மணிக்கு மஹா அபிஷேகம், சிறப்பு பூஜைகள், மஹா மங்களார்த்தி, இரவு, 8:30 மணிக்கு, மஹா மங்களார்த்தி, பிரசாதம் வினியோகிக்கப்படுகிறது. ஆக., 15ம் தேதி, ஆடி கிருத்திகையை முன்னிட்டு, காலை, 7:00 மணிக்கு சுப்பிரமணிய சுவாமிக்கு மஹா அபிஷேகம், சிறப்பு அலங்காரம், மஹா மங்களார்த்தி, பிரசாதம் வினியோகிக்கப்படுகிறது. விழாவுக்கு பக்தர்கள் வருகை தருமாறு, ஆலய தலைவர் எஸ்.எம்.வேலு, பொது செயலர் எஸ்.ரமேஷ், பொருளாளர் வி.ஜி.சீனிவாஸ் ஆகியோர் அழைப்பு விடுத்துள்ளனர்.