Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news 80 அடி உயர மகர கும்ப வாசல்: மொரட்டாண்டி ... கன்னியாகுமரி இ-தர்ஷன் மையம் மூலம் 7 ஆயிரம் பேர் திருப்பதி தரிசனம்! கன்னியாகுமரி இ-தர்ஷன் மையம் மூலம் 7 ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சபரிமலை புண்ணிய பூங்காவனம்: குப்பைகளை குறைக்க புதிய திட்டம்!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

24 நவ
2011
11:11

சபரிமலை : சபரிமலையில் மலைபோல் குவியும் குப்பைகளைக் குறைக்க, "சபரிமலை புண்ணிய பூங்காவனம் என்ற புதிய திட்டத்தை, திருவிதாங்கூர் தேவசம்போர்டு அறிமுகம் செய்துள்ளது. இதனை, சன்னிதானத்தில் தந்திரி மற்றும் மேல்சாந்தி ஆகியோர் துவக்கி வைத்தனர். சபரிமலைக்கு தினந்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர். அவர்கள் கொண்டுவரும் இருமுடி கட்டிலுள்ள, பன்னீர்பாட்டில்கள், கற்பூரம் போன்ற பொருட்கள் அடங்கிய பிளாஸ்டிக் டப்பாக்கள், மலைபோல் குவிகின்றன. ஒரு பக்தர், 250 கிராம் கழிவுகளை சபரிமலையில் விட்டுச் செல்வதாக கணக்கிடப்பட்டுள்ளது. இதனால், வனப்பகுதி மாசுபடுகிறது. இந்த, பிளாஸ்டிக் கழிவுகளை தின்னும் வனவிலங்குகள், உயிரிழக்கின்றன. மேலும், குப்பைகளை முழுமையாக அகற்றுவது, துப்புரவு பணியாளர்களுக்கு சவாலாக உள்ளது. எனவே, சபரிமலை வரும் பக்தர்கள், தேவையற்ற பொருட்களை, காட்டுப் பகுதிக்குள் வீசிச் செல்லாமல், தங்கள் ஊருக்கு கொண்டு செல்லும்படி கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். சபரிமலையில் பணிபுரியும் கேரள போலீசார், மத்திய ரிசர்வ் போலீஸ் படையினர், தேசிய பேரழிவு நிவாரணப் படையினர், தினமும் ஒரு மணிநேரம், இது போன்ற குப்பைகளை அகற்றும் பணியில் ஈடுபட முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான துவக்கவிழா, சன்னிதானத்தில் நடந்தது. திருவிதாங்கூர் தேவசம் போர்டு உறுப்பினர் பத்மநாபன் தலைமை வகித்தார். தந்திரி கண்டரரு மகேஸ்வரரு, மேல்சாந்தி பாலமுரளி நம்பூதிரி ஆகியோர் இந்த திட்டத்தை துவக்கி வைத்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
வேடசந்தூர்; வேடசந்தூர் தேவிநாயக்கன்பட்டியில் ஒவ்வொரு ஆண்டும், தைப்பூசத்தை முன்னிட்டு ஊர் மக்கள் ... மேலும்
 
temple news
பழநி; பழநி முருகன் கோயில் நிர்வாகத்தில் செயல்படும் பெரியநாயகி அம்மன் கோயிலில் தைப்பூச விழா நாளான ... மேலும்
 
temple news
அன்னூர்; குமரன் குன்று கல்யாண சுப்பிரமணியசாமி கோவில் தைப்பூச தேரோட்டத்தில் பல ஆயிரம் பக்தர்கள் ... மேலும்
 
temple news
காரைக்குடி; குன்றக்குடி சண்முகநாத பெருமான் கோயிலில் தைப்பூச திருவிழாவையொட்டி நேற்று ஏராளமான ... மேலும்
 
temple news
திருநெல்வேலி; தமிழகத்தில் பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் ஒன்றான திருநெல்வேலி நெல்லையப்பர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar