பரமக்குடி, நயினார்கோயில் ஆடி தேரோட்டம்ஜூலை 28 ல் திருக்கல்யாணம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
26ஜூலை 2017 10:07
நயினார்கோயில் நாகநாதசுவாமி சமேத சவுந்தர நாயகி கோயில் ஆடிப்பூர திருக்கல்யாண திருவிழாவில், தேரோட்டம் நடந்தது. பரமக்குடி அருகேயுள்ள இத்திருக்கோயிலில் ஆடிப்பூர திருக்கல்யாண விழா ஜூலை 17 ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் அம்பாள் பல வாகனங்களில் வீதியுலா வந்தார். நேற்று காலை 6:00 மணிக்கு மேல் சவுந்தர்யநாயகி அம்மன் திருத்தேருக்கு எழுத்தருளினார். தொடர்ந்து நான்கு மாட வீதிகளில் வலம் வந்த அம்மனை பக்தர்கள் வடம் பிடித்து இழுத்து வழிபட்டனர். இன்று தீர்த்தோற்ஸவம், நாளை காலை அம்மன் தபசு மண்டபம் எழுந்தருளல், மாலை மாற்றல் நிகழ்ச்சி நடக்கும்.
ஜூலை 28 ஆடி வெள்ளி காலை 9:45 முதல் 10:30 மணிக்குள் நாகநாதசுவாமி சவுந்தர்யநாயகிக்கு ஆடிப்பூரத்தில் திருக்கல்யாணம் நடக்கவுள்ளது. இரவு ரதத்தில் வீதியுலா நடைபெறும். ஏற்பாடுகளை ராமநாதபுரம் சமஸ்தானம் தேவஸ்தானத்தினர் செய்து வருகின்றனர்.