பதிவு செய்த நாள்
26
ஜூலை
2017
02:07
சென்னை : மடிப்பாக்கத்தில் அதிருத்ர மஹாயாகம், 31ம் தேதி வரை நடக்கிறது.
மடிப்பாக்கம் சத்சங்கம் சார்பில், அதிருத்ர மஹாயாகம், சத்சங்க மண்டபத்தில், 24ம் தேதி காலை கணபதி ஹோமத்துடன் துவங்கியது. தொடர்ந்து, கோபூஜை, கலச பிரதிஷ்டை நடக்கிறது.
பின், 31ம் தேதி வரை, தினமும் காலையில், மஹன்யாசம், ருத்ர ஜபம், ஹோமம், வசோர்தாரை பூர்ணாஹூதி நடக்கிறது. மாலையில், விசலூர் மணி அய்யர் குழுவினரின் திருமுறை இன்னிசை நிகழ்ச்சி நடக்கிறது. 31ம் தேதி காலை, 10:00 மணிக்கு, சண்டி ஹோமத்துடன், விழா நிறைவு பெறுகிறது. விழா ஏற்பாடுகளை, சத்சங்க நிர்வாகிகள் செய்துள்ளனர்.