பதிவு செய்த நாள்
28
ஜூலை
2017
11:07
திருப்பூர் : ராகு, கேது பெயர்ச்சி முன்னிட்டு, திருப்பூர், மண்ணரை ராஜகணபதி கோவிலில், சிறப்பு யாக பூஜை நேற்று நடந்தது. சிம்ம ராசியில் இருந்து கடக ராசிக்கு, ராகு பகவானும்; கும்ப ராசியில் இருந்து மகர ராசிக்கு, கேது பகவானும், நேற்று இடப்பெயர்ச்சியாகியுள்ளனர். ராகு, கேது பெயர்ச்சியை முன்னிட்டு, ஊத்துக்குளி ரோடு மண்ணரையில் உள்ள ராஜகணபதி கோவிலில், நேற்று சிறப்பு பூஜைகள் நடந்தன. நேற்று காலை ராகு, கேது பெயர்ச்சி, யாக பூஜைகள் துவங்கின. சிவாச்சார்யார்கள், பல்வேறு மூலிகை பொருட்களை கொண்டு பூஜை நடத்தினர். தொடர்ந்து, ராகு, கேது மற்றும் நவக்கிரகங்ளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார பூஜைகள் நடந்தன. ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கும் பெயர்ச்சியாகும் நேரத்தில், அர்ச்சனை, மகா தீபாராதனை நடந்தது.
ராகு, கேது பெயர்ச்சி பலன்கள் குறித்து, பண்டிட் அசோக்பாரதி விளக்கினார். இதற்கான ஏற்பாடுகளை, ராஜகணபதி கோவில் அறக்கட்டளை நிர்வாகிகள் செய்திருந்தனர். பல்லடத்தை அடுத்த சிங்கனுõரில் உள்ள ஸ்ரீகொண்டத்து காளியம்மன் கோவிலில், ராகு, கேது பெயர்ச்சியையொட்டி, ராகு பகவானுக்கு சிறப்பு வழிபாடு, ஆராதனை நடைபெற்றது. ராகுவுக்காக நடத்தப்பட்ட பரிகார வேள்வியில், பக்தர்கள் பங்கேற்று வழிபாடு செய்தனர். அதை தொடர்ந்து, சிறப்பு அலங்காரத்தில் ராகு பகவான், தேவியர்களுடன் அருள்பாலித்தார். காங்கயம், பழையகோட்டை ரோடு, காசிவிஸ்வநாதர் கோவிலில், ராகு, கேது பெயர்ச்சியை முன்னிட்டு, சிறப்பு யாகம் மற்றும் பரிகார பூஜைகள் நடந்தன. சிறப்பு யாக பூஜை மற்றும் பரிகார பூஜைகள் நடத்தப்பட்டன. இதில், பக்தர்கள் திரளாக பங்கேற்றனர்.