Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கல் தூண் தாங்கி கிடக்கும் வரலாறு ... சிதம்பரம் மாரியம்மன் கோவில் திருவிழா: பக்தர்கள் நேர்த்திக்கடன் சிதம்பரம் மாரியம்மன் கோவில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
போதி தர்மருக்கு காஞ்சிபுரத்தில் சிலை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

01 ஆக
2017
12:08

காஞ்சியில் பிறந்து வளர்ந்த, போதி தர்மருக்கு, தமிழகத்திலேயே, காஞ்சிபுரத்தில் தான் முதன் முறையாக சிலை அமைக்கப்பட்டுள்ளது. காஞ்சியை ஆட்சி செய்த, சிம்மவர்மன் என்ற பல்லவ மன்னரின், மூன்றாவது மகனாக பிறந்தவர் போதி தர்மர், என, கருதப்படுகிறது. இவரின் இயற்பெயர் புத்தவர்மன்.

Default Image

Next News

அக்காலத்தில் பல்லவ வம்சத்தில் பிறந்த கடைசி குழந்தையை புத்தமதத்திற்கு அர்ப்பணிப்பது மரபு. எனவே, பல்லவ மன்னன் கந்தவர்மன் தனது மகன் போதி தர்மனை குருகுல வாழ்க்கைக்காக, காஞ்சியில் தங்கி, பவுத்த சிந்தனைகளைப் பரப்பி வந்த, பிரக்ஞதாரர் என்ற சமய குருவிடம் சேர்த்தார். போதி தர்மரும், காஞ்சிபுரத்திலிருந்த படியே, களரி, வர்மம் போன்ற கலைகளை கற்றார். கி.பி., 6ம் நுாற்றாண்டின் துவக்கத்தில், காஞ்சிபுரத்தில் இருந்து, கடல் வழியாக, சீனாவுக்கு சென்றார். அங்கு, ஷாவ்லின் ஆலயத்தில் தங்கியிருந்து, ஜென் பவுத்தம் என்ற, தியான வழிபாட்டு மரபை தோற்றுவித்ததாக கூறப்படுகிறது. காஞ்சிக்கு பெருமை சேர்த்த போதி தர்மருக்கு, தமிழகத்திலேயே முதன் முறையாக, காஞ்சிபுரம் பழைய ரயில் நிலையத்தில் இருந்து, வையாவூர் செல்லும் ரோட்டில், காமாட்சியம்மன் நகரில், 1 ஏக்கரில், போதி தர்மர் புத்த விஹார், 20 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டது.

இங்கு, போதி எனப்படும், அரச மரத்தடியில், 3 அடி உயரத்தில், புத்தர் அமர்ந்த நிலையில் உள்ள, பவுத்த ஸ்துாபாவும், புத்தர் கோவிலில், 2 அடி உயரத்தில், நின்ற நிலையில், புத்தர் சிலையும் உள்ளது. வளாகத்திற்குள், 11 அடி உயர பீடத்தில், 4.5அடி உயரத்தில், நின்ற நிலையில், போதி தர்மர் சிலையும் நிறுவப்பட்டுள்ளது. புத்த துறவிகள் தங்குவதற்கு, பிக்கு நிவாஸும் உள்ளது.

எப்போது திறந்திருக்கும்?: காலை, 7:00 முதல், காலை, 10:00 மணி வரை மாலை, 4:00 முதல், இரவு, 7:00 மணி வரை ஞாயிறு மற்றும் பவுர்ணமி நாட்களில் முழு நாளும் திறந்திருக்கும்.

பூஜை முறை: புத்தருக்கு நெய் தீபம், மெழுகுவர்த்தி, ஊதுவர்த்தி ஏற்றி, பாதத்தில் மலர்கள் துாவி வணங்குகின்றனர்.

– நமது நிருபர் –

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தெப்பத் திருவிழா இன்று நடந்தது. ... மேலும்
 
temple news
திருச்சி; சமயபுரம் மாரியம்மன் கோவிலில் நடைபெற்று வரும் தைப்பூசத் திருவிழாவின்  5ம் நாளில் உற்சவ ... மேலும்
 
temple news
வாரணாசி;  காசியின் பகவதி அன்னபூர்ணேஸ்வரியின் பிராண பிரதிஷ்டா மகா கும்பாபிஷேகம் இன்று நடைபெற்றது. ... மேலும்
 
temple news
திருச்சி; ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில், பூபதி திருநாள் எனப்படும் தை தேர் திருவிழா, கொடியேற்றத்துடன் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்; காஞ்சிபுரம் உலகளந்த பெருமாள் கோவில், 108 திவ்ய தேசங்களில், 54வது திவ்ய தேசமாக விளங்குகிறது. ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar