பதிவு செய்த நாள்
02
ஆக
2017
01:08
சேலம்: வல்வில் ஓரி விழா மற்றும் ஆடி, 18 பண்டிகையையொட்டி, சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. சேலம் கோட்ட அரசு போக்குவரத்து மேலாண் இயக்குனர் பாண்டி வெளியிட்டுள்ள அறிக்கை: நாமக்கல் மாவட்டம், கொல்லிமலையில் இன்று நடக்கும் வல்வில் ஓரி விழா, நாளை நடக்கும் ஆடி, 18 பண்டிகைக்காக, பக்தர்கள் சென்று வர வசதியாக, பல்வேறு வழித்தடங்களில், இன்று முதல், 4 வரை சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. சேலத்தில் இருந்து, மேட்டூர், பவானி, கந்தாஸ்ரமம், பேளூர், காரவள்ளி, கொல்லிமலை அரப்பளீஸ்வரர் கோவில் மற்றும் ஒகேனக்கல் வழியாகவும், நாமக்கல்லில் இருந்து கொல்லிமலை அரப்பளீஸ்வரர் கோவில், வேலூர் வழியாக கொடுமுடி, மோகனூருக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. திருச்செங்கோட்டில் இருந்து கொடுமுடி, பவானி, சங்ககிரியில் இருந்து பவானி, ராசிபுரத்தில் இருந்து காரவள்ளி, கொல்லிமலைக்கும் சிறப்பு பஸ் வசதி உண்டு. இடைப்பாடியில் இருந்து மேட்டூர், பூலாம்பட்டி, கல்வடங்கம் வழியாகவும், தாரமங்கலத்தில் இருந்து மேட்டூருக்கும், மூன்று நாட்கள் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.