பதிவு செய்த நாள்
02
ஆக
2017
01:08
சங்ககிரி: சங்ககிரி, மலைக்கோட்டை கோவில் தேர்கள், வெயில், மழையில் நனைந்து வீணாகி வருகிறது. சங்ககிரி, மலைக்கோட்டையில் உள்ள சென்னகேசவ பெருமாள் கோவிலின், சித்திரை மாத தேரோட்டத்திற்காக, இரு தேர்களை பயன்படுத்தி வருகின்றனர். அங்கு, தேர்நிலையம் இல்லாததால், ஈஸ்வரன் கோவில் அருகே, சாலை ஓரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. கடந்த, 27ல் சட்டசபை உறுதிமொழி குழுவினர் மற்றும் அரசு அதிகாரிகள் மலைக்கோட்டை தேர்களை பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டனர். அதனால், தேரின், மேற்கூரைகள் பிரிக்கப்பட்டன. ஐந்து நாட்களுக்கு மேலாகியும், பாதுகாப்பு இல்லாமல் திறந்த வெளியில் தேர் உள்ளதால், வெயில் மற்றும் மழையில், நனைந்து வீணாகி வருகிறது. அதனால், மரத்தேரின் உறுதித்தன்மை, கெட்டு விடும். எனவே, இந்து அறநிலையத்துறை அதிகாரிகள், பாதுகாப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும்.