சீர்காழி கண்ணகித் திருவிழா: திரளான பக்தர்கள் தரிசனம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
02ஆக 2017 02:08
நாகை மாவட்டம் பூம்புகாரை அடுத்த மேலையூர் பத்தினிக் கோட்டத்தில் கண்ணகிக்கு தனிக்கோயில் அமைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கண்ணகிக்கு அமையப்பட்டுள்ள ஒரே கோயிலான இந்த கோயிலில் ஆடி, அனுஷம் நட்டத்திரத்தில் கண்ணகி வீடுபேறு அடைந்த நாளான இன்று கண்ணகித்திருவிழா நடைபெற்றது.
விழாவை முன்னிட்டு பள்ளி மாணவ, மாணவிகளுக்கான சிலப்பதிகார இசைப் போட்டிகளும், காரைக்குடி சோமசுந்தரம், மதுரை முனைவர் சுந்தரம் ஆகியோர் பங்கேற்ற கற்பின் கனலி என்ற தலைப்பில் சொ ற்பொழிவும் நடத்தப்பட்டது. தொடர்ந்து கண்ணகி பெருமாட்டிக்கு பலவிதமான திரவியப்பொடிகளை கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டு, புஷ்பஅலங்காரமும், மஹா தீபாராதனை யும் நடத்தப்பட்டது. பூஜைகளை துரை குருக்கள் நடத்தி வைத்தார். முன்னதாக கண்ணகியை கடத்தில் எழுந்தருளசெய்து சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. சிலப்பதிகார ஆய் வு மையம் மற்றும் பத்தினிக்கோட்ட அறங்காப்பாளர் ராஜசேகர் முன்னிலையில் நடைபெற்ற இந்த திருவிழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு கண்ணகி பெருமாட்டியை தரிசனம் செய்தனர்.