பதிவு செய்த நாள்
03
ஆக
2017
10:08
ஆர்.கே.பேட்டை: சனி பிரதோஷ விழாக்கள் அடுத்தடுத்து வருவதால், சிவ பக்தர்கள் ஏக மகிழ்ச்சியில் உள்ளனர். உபய கைங் கர்யம் செய்ய போட்டா போட்டி நிலவுகிறது. சிவாலயங்களில் பிரதோஷ அபிஷேகம் சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம். பிரதோஷ பூஜையில் கலந்து கொண்டு வழிபாடு செய்தால், ஆண்டு முழுவதும் கோவிலுக்கு சென்று வழிபட்ட பலன் கிடைக்கும் என, சல்லப்படுகிறது. இதனால், பிரதோஷ காலத்தில், சிவாலயங்களில் நந்தியம் பெருமானுக்கு நடக்கும் அபிஷேகத்தை காண, திரளான பக்தர்கள் கூடுவர். அதிலும், பிரதோஷம் நடந்ததாக கூறப்படும் சனிக்கிழமையில் அமையும் பிரதோஷம் மிகவும் விசேஷம். இந்த ஆகஸ் ட்டில்,நாளை மறுதினம் வளர்பிறை பிரதோஷமும், வரும், 19ம் தேதி என, அடுத்தடுத்து இரண்டு பிரதோஷ விழாக்கள் சனிக்கிழமைகளில் அமைகின்றன.
சனிக்கிழமையில் அமையும் பிரதோஷ விழாக்கள், சிவாலயங்களில் பிரமாண்டமான முறையில் நடைபெறும். இதையொட்டி, ஆர்.கே.பேட்டை அடுத்த , காந்தகிரி மற்றும் வங்கனுார் மலைக்கோவில்கள், மட்டவளம் கோவத்சநாதேஸ்வரர், அத்திமாஞ்சேரி பேட்டை கல்யாண சுந்தரேசனார், பொதட்டூர்பேட்டை அகத்தீஸ்வரர் கோவில்களில் பிரதோஷ அபிஷேகம் நடத்தப்படுகிறது. சனி பிரதோஷ விழாவில் உபய கைங்கர்யம் செய்ய, பக்தர்கள் தங்களுக்குள் போட்டா போட்டி நடத்தி வருகின்றனர். இது தவிர, பக்தர்கள் தாங்களாக பக்தி துண்டு பிரசுரங்கள் மற்றும் பிரசாத வினியோகம் செய்யவும் உத்தேசித்து உள்ளனர்.