பதிவு செய்த நாள்
03
ஆக
2017
10:08
மதுரை: ஆடிப்பெருக்கு விழாவை முன்னிட்டு, தங்கள் வீடுகளில் உள்ள குடிநீர் குழாய்களிலும், சிலர் கடற்கரையிலும் கொண்டாடினர்.
ஆண்டு தோறும், ஆடி 18ம் தேதி, நீர்நிலைகளில் மங்கலப் பொருட்களை விட்டு, குடும்பத்துடன் விவசாயிகள் மகிழ்ச்சியுடன் கொண்டாடுவது வழக்கம். இவ்வாண்டு, ஆடிப் பெருக்கை முன்னிட்டு, மதுரை மாவட்டத்தில், பக்தர்கள் கோவில்களில் தரிசனம் செய்து கோலாகலமாக கொண்டாடினர். ஆடிப்பெருக்கை முன்னிட்டு மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் தாலி பெருக்கி கட்டி புதுமணத் தம்பதிகள் சிறப்பு வழிபாடு செய்தனர். ஆடிப்பெருக்கு பண்டிகையையையொட்டி, அதிகாலை முதல் பக்தர்கள் கோவிலுக்கு சென்று வழிபாடு செய்வதில் ஆர்வம் காட்டினர்.
திருச்சி: ஆற்றங்கரையோரங்களில் மக்கள், முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து வழிபட்டனர். ஆடிப்பெருக்கு பண்டிகையையையொட்டி, தண்ணீர் இன்றி பாலை வனமாக காட்சியளிக்கும் திருச்சி ஸ்ரீரங்கம் காவிரியாறு அம்மா மண்டபப் படித்துறையில், தார் பாய் விரித்து அதில், செயற்கையாக தண்ணீரை ஒட விட்டு, காவிரி அன்னையை பக்தர்கள் வழிப்பட்டனர். ஸ்ரீரங்கம் காவிரியாறு அம்மா மண்டபப் படித்துறையில், மாநகராட்சி சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த செயற்கையான நீறுற்றில் பக்தர்கள் புனித நீராடினர்.