பதிவு செய்த நாள்
03
ஆக
2017
11:08
காஞ்சிபுரம் : காஞ்சிபுரம், ஓம்சக்தி தண்டு முத்துமாரி அம்மன் கோவிலில், ஆடித்திருவிழா நேற்றச்ு முன்தினம் நடந்தது. காஞ்சிபுரம் ரயில்வே ரோட்டில், ஓம்சக்தி தண்டு முத்துமாரி அம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில், 22ம் ஆண்டு, ஆடித்திருவிழாவையொட்டி, கடந்த, 28ம் தேதி, விநாயகர் துதியும், பரஞ்சோதி அம்மன் கோவிலில் இருந்து, பால்குடம் எடுத்து வரப்பட்டது. அன்று மாலை, 6:00 மணிக்கு காப்பு கட்டுதல் நிகழ்ச்சி நடந்தது. நேற்று காலை, 6:00 மணிக்கு, அம்மனுக்கு அபிஷேகமும், 10:30 மணிக்கு அம்மன் வீதியுலாவும், பகல், 1:00 மணிக்கு கூழ்வார்த்தலுடன் அன்னதானம் வழங்கப்பட்டது. இரவு, 7:00 மணிக்கு, பல்வேறு மலர்களால் அலங்கரிக்கப்பட்ட அம்மன், சிம்ம வாகனத்தில் எழுந்தருளி, நகரின் முக்கிய வீதிகளில் உலா வந்தார். இரவு, ’மேல்மலையனுார் அங்காளம்மன் மகத்துவம்’ என்ற நாடகம் நடந்தது. விழா ஏற்பாடுகளை, காஞ்சி டூரிஸ்ட் வேன் ஓட்டுநர் முன்னேற்ற நலசங்கத்தினர் செய்திருந்தனர்.