திருப்புல்லாணி கோயிலில் கருடாழ்வாருக்கு திருமஞ்சனம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
03ஆக 2017 11:08
கீழக்கரை: திருப்புல்லாணி ஆதிஜெகநாதப்பெருமாள் சமேத பத்மாஸனித்தாயார் கோயிலில் கருடாழ்வார் வணங்கிய நிலையில் உள்ளார். ஆடி சுவாதி நட்சத்திரத்தை முன்னிட்டு வடக்கு மூலையில் மதில் சுற்றில் உள்ள கருடாழ்வாருக்கு விசேஷ திருமஞ்சனம் நடந்தது. இரவு 7:35 மணியளவில் சாற்றுமுறை கோஷ்டி பாராயணம் செய்யப்பட்டது. வருடத்திற்கு ஒருமுறை மட்டுமே இவ்வாறு நடப்பது குறிப்பிடத்தக்கது.