பதிவு செய்த நாள்
04
ஆக
2017
01:08
நாகை: நாகை மாவட்டம் சீர்காழி தாலுக்கா பூம்புகாரை அடுத்த பல்லவனம் கிராமத்தில் சௌந்தரநாயகி சமேத பல்லவனீஸ்வரர் சுவாமி கோயில் அமைந்துள்ளது. தேவாரப்பாடல் பெற்ற கோயிலில் திருவெண்காடாராகிய பட்டினத்தடிகள் தனிசன்னதியில் எழுந்தருளியுள்ளார். இக்கோயிலில் சுவாமி, அம்பாள் மற்றும் பட்டினத்தடிகளை தரிசனம் செய்தால் கு ழந்தைகள் ஞானம் பெறுவதுடன், திருமண தடை நீங்கி, குழந்தை பாக்கியம் கிடைக்கும் என கூறப்படுகிறது.
பிரசித்திபெற்ற இந்த கோயிலில் பட்டினத்தடிகள் அற்புத திருவிழா கடந்தமாதம் 28ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்றுவருகிறது. 7ம் நாள் திருவிழாவான பட்டினத்தடிகளின் தாயார் ஞானகலாம்பிகை தகன நிகழ்ச்சி இன்று அதி காலை நடைபெற்றது. இதனை முன்னிட்டு நேற்றிரவு ஞானகலாம்பிகை பரிபூரணமடைதலும், இன்று அதிகாலை ஞானகலாம்பிகை புஷ்ப பல்லாக்கில் மயானம் சேரும் நிகழ்வும், அங்கு பட்டினத்தடிகள் எழுந்தருளி தாயாருக்கு நீர், நெருப்பு கடனை நிறைவேற்றும் வகையில் ஞானகலாம்பிகையை வாழை மரத்தில் வைத்து, ஞானக்கினியால் தகனம் செய் யும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. தொடர்ந்து கோயிலின் மேல் புறத்தில் ஸ்ரீ சௌந்தரநாயகி சமேத பல்லவனீஸ்வரர் சுவாமி ரிஷப வாகனத்தில் எழுந்தருளி ஞானகலாம்பிகைக்கு மோட்ஷம் கொடுத்து, பட்டினத்தடிகளுக்கு காட்சியளிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. தாயாரின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் திரளா ன பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி, அம்பாள் மற்றும் பட்டினத்தடிகளை தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை கோயில் செயல்அலுவலர் கோபி தலைமையில் நாட்டுக்கோ ட்டை நகரத்தார் மற்றும் பல்லவனீஸ்வரம் கிராம மக்கள் செய்திருந்தனர்.