Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
ஓசூர் உலக நன்மைக்காக மலை கோவிலில் ... நீலகிரி மாவட்டம் அம்மன் கோவில்களில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பவானி ஆடி மூன்றாவது வெள்ளி: அம்மனுக்கு அலங்காரம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

05 ஆக
2017
03:08

பவானி: ஆடி மாத, மூன்றாவது வெள்ளிக்கிழமையை ஒட்டி, ஈரோடு மாவட்டத்தில், அம்மன் கோவில்களில், சிறப்பு வழிபாடு,  களை கட்டியது.

ஆடி வெள்ளிக்கிழமைகள், அம்மனுக்கு உகந்தவையாக கருதப்படுகிறது. இந்நிலையில், ஆடி மாத மூன்றாவது வெள்ளியான, அம்மன் கோவில்களில், மூலவர் சுவாமிக்கு சிறப்பு அலங்காரம், ஆராதனை நடந்தது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். ஈரோடு பெரிய மாரியம்மன் தங்க கவச அலங்காரத்தில் அருள் பாலித்தார். கொங்காலம்மன், வீரப்பன்சத்திரம் மாரியம்மன், வலசு மாரியம்மன், நடுமாரியம்மன், காரைவாய்க்கால் மாரியம்மன் உள்ளிட்ட அனைத்து அம்மன் கோவில்களிலும், அபிஷேகம், அலங்காரம் மகா தீபாராதனை நடந்தது. கள்ளுக்கடை மேடு பத்ரகாளியம்மன், சிறப்பு மஞ்சள் காப்பு அலங்காரத்தில் காட்சியளித்தார். கோவில் முன்புள்ள குண்டத்தில், பக்தர்கள் தீபம் ஏற்றி வழிபட்டனர். கோவில் நண்பர்கள் குழு சார்பில், வடை, பாயாசத்துடன், அன்னதானம் வழங்கப்பட்டது. இதில், 3,000த்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர்.

* பவானி செல்லியாண்டியம்மன் கோவில், வர்ணபுரம் சமயபுரம் மாரியம்மன் உள்ளிட்ட கோவில்களில், அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரத்துடன் தீபாராதனை நடந்தது.

* ஆடி வெள்ளியுடன், வரலட்சுமி நோன்பும் சேர்ந்து வந்தது. இதனால் அந்தியூர் தேர்வீதி காமாட்சியம்மன், 1,008 திருமாங்கல்ய அலங்காரம் செய்து, சிறப்பு பூஜை நடந்தது. இதேபோல், பத்ரகாளியம்மன் கோவிலிலும் பக்தர்கள் குவிந்தனர்.

*கோபி சாரதா மாரியம்மன் கோயிலில்  காலை முதல் ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். அம்மனுக்கு வரலட்சுமி அலங்காரம் செய்யப்பட்டது. இதேபோல், பாரியூர் கொண்டத்து காளியம்மன் கோவிலில், 60 அடி குண்டத்துக்கு பெண்கள், விளக்கேற்றி வழிபட்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவாரூர் : திருவாரூர் மாவட்டம், விளமல் பதஞ்சலி மனோகரர் கோவிலில் இன்று ஐப்பசி வெள்ளிக்கிழமையை ... மேலும்
 
temple news
திருச்சி; ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதசி பெருவிழாவிற்க்கு முகூர்த்தக்கால் நடும் ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்; உலகப் புகழ்பெற்ற, தஞ்சை பெரிய கோவிலை, கட்டிய மாமன்னன் ராஜராஜ சோழனின் 1040வது , கோலாகலமாக ... மேலும்
 
temple news
புதுச்சேரி, கவுசிக பாலசுப்பிரமணியர் கோவில் சஷ்டி நிறைவு விழாவை யொட்டி வள்ளி, தெய்வானை சமேத கௌசிக ... மேலும்
 
temple news
சென்னை; பெசன்ட் நகர், அஷ்டலட்சுமி கோவிலில், 2 கோடி ரூபாயில் திருப்பணிகள் முடிந்த நிலையில் இன்று மகா ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar