Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பாலக்கோட்டுக்கு அருகே பாறை ... வடமதுரை சவுந்தரராஜ பெருமாள் கோயிலில் தேரோட்டம் வடமதுரை சவுந்தரராஜ பெருமாள் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பரமக்குடியில் ஆடித்தேரோட்டம்: கோவிந்தா கோஷத்துடன் வீதிவலம்
எழுத்தின் அளவு:
பரமக்குடியில் ஆடித்தேரோட்டம்: கோவிந்தா கோஷத்துடன் வீதிவலம்

பதிவு செய்த நாள்

08 ஆக
2017
11:08

பரமக்குடி: பரமக்குடி சுந்தரராஜப் பெருமாள் கோயிலில் ஆடி பிரம்மோற்ஸவ தேரோட்டம் ரதவீதிகளில், பக்தர்களின் கோவிந்தா கோஷத்துடன் வலம் வந்தது. இக்கோயிலின் ஆடி பிரம்மோற்ஸவ விழா கடந்த ஜூலை 30 ல் கொடியேற்றப்பட்டு நடந்து வருகிறது. தினமும் பெருமாள் பல்வேறு வாகனங்களில் வீதிவலம் வந்தார். நேற்று முன்தினம் நவநீத கண்ணன் அலங்காரத்திலும், இரவு குதிரை வாகனத்தில் அருள்பாலித்தார். நேற்று காலை 10 :00 மணிக்கு ஸ்ரீதேவி, பூதேவி சமேத சுந்தரராஜப் பெருமாள் சர்வ அலங்காரத்துடன் தேரில் எழுந்தருளினார். தொடர்ந்து தீபாராதனை நடந்து தேர், பக்தர்களின் கோவிந்தா கோஷத்துடன், ரதவீதிகளில் வலம் வந்தது.

சுமார் 3 மணி நேரம் சுற்றி வந்த தேர் மதியம் 1 :00 மணிக்கு நிலை அடைந்தது. நேற்று வெயில் தாக்கம் குறைந்த மேகமூட்டத்துடன் காணப்பட்டதால் பக்தர்கள் பரவசம் அடைந்தனர். பின்னர் தேரில் இருந்து கோயிலுக்கு எழுந்தருளிய பெருமாளுக்கு 108 தேங்காய்கள் உடைக்கும் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து மலர்களால் அர்ச்சனை செய்தவாறு மாட வீதிகளில் பெருமாளை தாலாட்டி அழைத்து வந்தனர். பின்னர் சுந்தரராஜபவனத்தில் அன்னதானம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தும், அன்னம் சாப்பிட்டு சென்றனர். இரவு சந்திரகிரகணத்தையொட்டி, சயனத்திருக்கோலத்தில் பெருமாள் மாலை 5 :00 மணிக்கு வீதிவலம் வந்து பின்னர் இரவு 7:00 மணிக்கு நடை சாத்தப்பட்டது. இன்று காலை தீர்த்தவாரி நிறைவடைந்து, இரவு கொடியிறக்கத்துடன் விழா நிறைவு பெறும்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
புதுச்சேரி: சனிப் பெயர்ச்சியையொட்டி மொரட்டாண்டி சனீஸ்வரர் கோவிலில் வரும் மார்ச் 6ம் தேதி மகா யாகம் ... மேலும்
 
temple news
அரியலூர்; ஜெயங்கொண்டம் அருகே உள்ள கங்கை கொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோவிலில் ஜப்பானை சேர்ந்த மிகவும் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் தை பவுர்ணமியையொட்டி மூன்று நாட்கள் நடந்த ... மேலும்
 
temple news
பாலக்காடு; கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்தின் பாரதப்புழா நதிக்கரையில் நடக்கும் மஹாமக கும்பமேளா, ... மேலும்
 
temple news
வடலூர்; வள்ளலார் சித்தி பெற்ற மேட்டுக்குப்பம் சித்தி வளாகத்தில், திருஅறை தரிசனம் நடந்தது.கடலூர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar