மாரியம்மன் கோவிலில் கனி விளக்கு பூஜை: திரளான பக்தர்கள் பங்கேற்பு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
12ஆக 2017 02:08
கோத்தகிரி: கோத்தகிரி கடைவீதி மாரியம்மன் கோவிலில், ஏழாம் ஆண்டு கனிவிளக்கு சிறப்பு வேள்வி பூஜை நேற்று நடந்தது.முன்னதாக, காலை,6:00, 11:00 மணி மற்றும் மாலையும் அம்மனுக்கு சிறப்பு அபிேஷக அலங்கார பூஜை நடந்தது. இதனை தொடர்ந்து, கோத்தகிரி பகுதி மகளிர் குழுவினர் பங்கேற்ற கனி விளக்கு பூஜை நடந்தது. கோவில் அர்ச்சகர்கள் சக்திவேல், பார்த்தீபன் மற்றும் மாரிமுத்து ஆகியோர், மந்திரங்கள் முழங்கி பூஜைகளை நடத்தினர். தொடர்ந்து, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவில், கோத்தகிரி சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து, 150க்கும் மேற்பட்ட பெண்கள் பூஜையில் பங்கேற்றனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் வழிப்பாட்டு குழுவினர், விழா குழுவினர் மற்றும் மகளிர் குழுவினர் செய்திருந்தனர்.