Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
கோவிலில் கும்பாபிஷேகம் பழநி ... முள்ளாட்சி மாரியம்மன் கோவில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ரூ.10 கோடியில் மேம்பாட்டு பணிகள்: சமயபுரம் கோவிலில் கலெக்டர் ஆய்வு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

28 நவ
2011
12:11

திருச்சி: திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவிலில் நடக்கும் பல்வேறு பணிகளை கலெக்டர் ஜெயஸ்ரீ நேற்று ஆய்வு செய்தார். சமயபுரம் மாரியம்மன் கோவிலில், 2 கோடியே 40 லட்ச ரூபாய் செலவில், கோவில் வெளிப்பிரகாரம் விரிவுப்படுத்தும் பணி மற்றும் 6 கோடியே 10 லட்ச ரூபாய் செலவில், பக்தர்கள் தங்கும் அமாவாசை மற்றும் பௌர்ணமி மண்டபம் கட்டும் பணி, பஸ்ஸ்டாண்ட் மேம்பாட்டு பணிகளை கலெக்டர் பார்வையிட்டார். முடிகொட்டகை பகுதியில் சுத்தமின்றி, சிதறிக்கிடந்த முடிகளை உடனுக்குடன் அகற்ற உத்தரவிட்டார். பஸ்ஸ்டாண்ட்டில் பூட்டிகிடந்த கழிவறைகளை பக்தர்களின் வசதிக்காக உடனடியாக திறக்கும்படி உத்தரவிட்டார். அதைத்தொடர்ந்து, கோவில் வளாகத்தை சுற்றி அடிப்படை வசதிகள் மேம்படுத்துதல் குறித்த ஆலோசனைக்கூட்டம், மாரியம்மன் கோவில் திருமண மண்டபத்தில் நேற்று நடந்தது.

கலெக்டர் ஜெயஸ்ரீ தலைமை வகித்தார். எஸ்.பி., லலிதாலட்சுமி, மணச்சநல்லூர் எம்.எல்.ஏ., பூனாட்சி முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் பக்தர்களுக்கு வேண்டிய அடிப்படை வசதிகள், சுகாதார வசதிகள், தங்க பாதுகாப்பான இட வசதிகளை ஏற்படுத்தி கொடுப்பது, அடிப்படை வசதிகளை விரைவாக மேற்கொள்ள வேண்டும். திருவிழாக்கள், அமாவாசை போன்ற முக்கிய நாட்களில் பக்தர்கள் எளிதாக தரிசனம் செய்யும் வகையில், தேரடி முதல் கோவில் வரை வரிசையாக பக்தர்கள் செல்ல ஏதுவாக தடுப்புகள் அமைக்க வேண்டும். ஸ்வாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்களின் பாதுகாப்பு வசதியை கருத்தில் கொண்டு, "சி.சி.டி.வி மூலம் கண்காணிக்க ஏற்பாடு செய்தல் உட்பட பல்வேறு பணிகள் விரிவாக ஆய்வு செய்யப்பட்டன. கோவில் இணை கமிஷனர் பொன்செல்வராஜ், மணச்சநல்லூர் யூனியன் சேர்மன் பரமேஸ்வரி, ஆர்.டி.ஓ., ஜெயஷீலா, எஸ்.கண்ணனூர் டவுன் பஞ்., தலைவர் அம்சவள்ளி உட்பட பலர் பங்கேற்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ராமேஸ்வரம்: ஆவணி அமாவாசை யொட்டி ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் அக்னி தீர்த்த கடலில் ஏராளமான பக்தர்கள் ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை; திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் சுவாமி கோவிலில் அமாவாசை தீர்த்தவாரி நடைபெற்றது. ... மேலும்
 
temple news
கோவை ; ஆவணி அமாவாசை தினத்தையொட்டி கோவை பேரூர் நொய்யல் ஆற்றங்கரையில் பொதுமக்கள் தங்கள் முன்னோர்களுக்கு ... மேலும்
 
temple news
ஆர்.எஸ்.மங்கலம்; உப்பூர் விநாயகர் கோயில், சதுர்த்தி விழாவின், 4ம் நாள் ஊர்வலமாக மயில் வாகனத்தில், ... மேலும்
 
temple news
கோவை; போத்தனூர் கணேசபுரம் பகுதியில் அமைந்துள்ள மூரண்டம்மன்  கோவிலில் ஆவணி அமாவாசையை முன்னிட்டு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar