பதிவு செய்த நாள்
16
ஆக
2017
12:08
திருப்போரூர்:திருப்போரூர், கந்தசுவாமி கோவில் ஆடி கிருத்திகை விழா நேற்று கோலாகலமாக நடைபெற்றது.திருப்போரூரில், பிரசித்தி பெற்ற கந்தசுவாமி கோவில்
உள்ளது. இங்கு, ஆண்டு தோறும் தை, மாசி, சித்திரை, ஆடி மாதங்களில் வருகின்ற கிருத்திகை விழா முக்கிய விழாவாக கொண்டாடப்படுகிறது.
அது போல, நேற்று ஆடி கிருத்திகை விழா விமரிசையாக கொண்டாடப்பட்டது. விழாவையொட்டி, அதிகாலை, 3:00 மணிக்கு நடை திறக்கப்பட்டது.பின், சிறப்பு அர்ச்சனைகளும், தீபாராதனைகளும் சுவாமிக்கு செய்யப்பட்டன. விழாவில், சென்னை
மற்றும் காஞ்சிபுரம் மாவட்டத்தின் பல பகுதிகளிலிருந்து வந்திருந்த பக்தர்கள், காவடிகள்
எடுத்தும், அலகு குத்தியும், முடிகாணிக்கை செலுத்தியும் வேண்டுதல்களை
நிறைவேற்றினர்.
மாலை, 4:00 மணிக்கு உற்சவருக்கு மஹா அபிஷேகமும், அதைத் தொடர்ந்து, இரவு, 7:00 மணிக்கு வள்ளி, தெய்வானையுடன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய கந்தசுவாமி பெருமானின் திருவீதியுலா மாடவீதிகளில் நடைபெற்றது.