மயிலாடுதுறையில் காவிரி மஹாபுஷ்கரம் தீர்த்தம் தபால்நிலையம் மூலம் கிடைக்க ஏற்பாடு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
16ஆக 2017 01:08
மயிலாடுதுறை: மயிலாடுதுறையில் செப்டம்பர் மாதம் நடைபெற உள்ள காவிரி மஹா புஷ்கரம் தீர்த்தம் இந்தியாவில் உள்ள அனைத்து பகுதி மக்களுக்கும் கிடைக்கும் வகையில் தபால் நிலையம் மூ லம் கிடைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் வரும் செப்டம்பர் மாதம் 12ம் தேதி முதல் 24ம் தேதி வரை காவிரி புஷ்கரம் விழா கொண்டாடப்பட உள்ளது. 144 ஆண்டுகளுக்கு ஒருமுறை நி கழவுள்ள இந்த விழாவில் உள்ளூர் மட்டுமின்றி நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து லட்சகணக்காண பக்தர்கள் மயிலாடுதுறை காவிரியில் புனித நீராடுவார்கள் என்று எதிர்பரர்க்க ப்படுகிறது. புஷ்கர விழாவில் பங்கேற்பதன் மூலம் பாவங்கள் நீங்குவதுடன், ஐஸ்வர்யங்கள் கிடைக்கும் என்பது ஐதீகம். காவிரி மஹா புஷ்கரம் விழாவில் தற்போது வாழ்ந்து கொண் டு இருப்பவர்கள் மட்டுமே பங்கேற்க முடியும். ஏனெனில் அடுத்த மஹாபுஷ்கரம் 144 ஆண்டுகள் கழித்துதான் வரும் அதனை தற்போது வாழ்பவர்கள் யாராலும் காண இயலாது என் பதால் இந்த விழாவில் திரளானோர் பங்கேற்பார்கள். இதில் வெளிமாநிலத்தில் இருந்தும், வெளியூர்களில் இருந்தும் பங்கேற்க முடியாதவர்களுக்கு காவிரி மஹாபுஷ்கர விழா தீர்த்தம் தபால்துறை மூலம் கிடைக்க செய்வதற்கான முயற்சியில் காவிரி புஷ்கரம் அறக்கட்டளையினர் முயற்சித்தனர். காவிரி தீர்த்தம், மகாமக தீர்த்தங்கள் தபால் நிலையங்கள் மூலம் விற்ப னை செய்ததுபோன்று காவிரி புஷ்கர தீர்த்தத்தை பாட்டில்கள், செப்பு செம்புகளில் அடைத்து தபல் நிலையங்கள் மூலம் குறைந்த விலையில் விற்பனை செய்திட திட்டமிடப்பட்டுள் ளது. காவிரி புஷ்கர தீர்த்தம் பெற விரும்புபவர்கள் தங்கள் பகுதியில் உள்ள அஞ்சலகத்தில் அதற்கான கட்டணத்தை செலுத்தி முகவரியை பதிவுசெய்தால் அவர்களுக்கு புஷ்கரவிழா காவிரி தீர்த்தம் அணுப்பிவைக்கப்படும். மேலும் சிறப்பு தபால் உறை,அஞ்சல் அட்டைகள் போன்றவை வெளியிடவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாக மயிலாடுதுறை அஞ்சல் துறை கண்காணிப்பாளர் அஜாதசத்ரு, உதவி கண்காணிப்பாளர் அப்துல்லத்தீப் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.