பதிவு செய்த நாள்
16
ஆக
2017
02:08
மாமல்லபுரம்:நவநீத கிருஷ்ணசுவாமி கோவிலில், கிருஷ்ண ஜெயந்தி உற்சவம் துவங்கி, தொடர்ந்து நடைபெறுகிறது.
மாமல்லபுரத்தில், ருக்மணி பாமா சமேத நவநீத கிருஷ்ணசுவாமி கோவில், பஜனை கோவிலாக, பக்தர்களிடம் பிரசித்தி பெற்றது. இக்கோவிலின் முக்கிய உற்சவமான கிருஷ்ண ஜெயந்தி உற்சவம், நேற்று முன்தினம் துவங்கியது.தொடர்ந்து, தினமும் மாலையில், சுவாமி சிறப்பு திருக்கோலத்தில் எழுந்தருளுதல், திருமஞ்சனம், இரவில் பக்தி சொற்பொழிவு என, 23ம் தேதி வரை உற்சவ விழா நடக்கிறது. இறுதி நாளான, 24ம் தேதி, உறியடி கண்ணனுக்கு திருமஞ்சனம், உறியடி உற்சவம் நடைபெறுகிறது.