திருக்கழுக்குன்றம்:திருக்கழுக்குன்றத்தில் கிருத்திகை விழா நேற்று கொண்டாடப்பட்டது. திருக்கழுக்குன்றம்,காணக்கோவில் பேட்டையில், வரசக்தி விநாயகர் கோவில் உள்ளது. இக்கோவிலில் மாதந்தோறும் மகா சங்கரஹர சதுர்த்தி,பவுர்ணமி, கிருத்திகை வழிபாடு நடைபெறுகிறது.
அதன்படி, ஆடி கிருத்திகையை ஒட்டி நேற்று, வள்ளி தெய்வானை சமேத சுப்ரமணியருக்கு மகா அபிஷேகம் நடைபெற்றது.பின், மலர் அர்ச்சனை, மஹா தீப ஆராதனை நடைபெற்றது. இரவு, 7:30 மணிக்கு சுவாமி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அது போல, வேதகிரீஸ்வரர் தாழக்கோவிலில் உள்ள சுப்பிரமணியருக்கு மஹா அபிஷேகம், மஹா தீப ஆராதனை நடைபெற்றது.