பதிவு செய்த நாள்
21
ஆக
2017
12:08
விழுப்புரம்: விழுப்புரத்தில், மேல்மருவத்துார் ஆதிபராசக்தி சித்தர் சக்தி பீடம் சார்பில் அக்னிசட்டி மற்றும் கஞ்சி கலய ஊர்வலம் நடந்தது. விழுப்புரம் நாராயணன் நகர், மேல்மருவத்துார் ஆதிபராசக்தி சித்தர் சக்தி பீடம் சார்பில், ஆடிப்பூர விழாவை முன்னிட்டு, கஞ்சி வார்த்தல் மற்றும் பால் அபிஷேக விழா நேற்று நடந்தது. முன்னதாக, பூந்தோட்டம் ஆதிவாலீஸ்வரர் கோவில் வளாகத்திலிருந்து, பக்தர்களின் அக்னிசட்டி மற்றும் கஞ்சி கலய ஊர்வலத்தை, மாவட்ட தலைவர் ஜெயபால் தலைமை தாங்கி, துவக்கி வைத்தார். மாவட்ட இணைச் செயலாளர் மணிவாசகம், மாவட்ட துணை தலைவர் ராமமூர்த்தி, செயலாளர் பரத்குமார் உள்ளிட்ட நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.
முக்கிய வீதிகள் வழியாக வந்த பக்தர்களின் ஊர்வலம் நாராயணன் நகர் சித்தர் பீடத்தை அடைந்தனர். அங்கு, புதுச்சேரி அரவிந்த் கண் மருத்துவமனை டாக்டர் திருவேங்கட கிருஷ்ணன், பால் அபிஷேகத்தை துவக்கி வைத்தார். பின் அன்னதானம் வழங்கப்பட்டது. கஞ்சி மற்றும் பால் அபிஷேக நிகழ்ச்சியை விழுப்புரம் வட்ட வேள்விக்குழு தலைவர் பாலசுப்ரமணியம் துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில், நிர்வாகிகள் ராஜாராம், சுந்தரமூர்த்தி, செல்வம், காயத்ரி, ராஜம்மணியம்மாள், மாரிமுத்து, ஜெயா, சாந்தி பெரியசாமி, ஷர்மிலா, அகிலா, பார்கவி, செல்வலதா, சவுந்தர்யா உட்பட பலர் கலந்து கொண்டனர்.