Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news தேசுமுகிப்பேட்டை கோவிலில் கோலாகல ... வல்லப கணபதியாக ராஜகணபதி அருள்பாலிப்பு வல்லப கணபதியாக ராஜகணபதி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
முந்திரி, திராட்சை, பாதாம் பொரி உருண்டை விநாயகர்
எழுத்தின் அளவு:
முந்திரி, திராட்சை, பாதாம் பொரி உருண்டை விநாயகர்

பதிவு செய்த நாள்

28 ஆக
2017
12:08

ஆர்.கே.பேட்டை : விநாயகருக்கு பிடித்தமான தின்பண்டம் மற்றும் பழங்களை கொண்டு, புதுமையாக வடிவமைக்கப்பட்ட விநாயகர் சிலைகளை, ஏராளமான பக்தர்கள் வியப்புடன் தரிசனம் செய்தனர். பிரமாண்டமான, ’ரெடிமேட்’விநாயகர் சிலைகள் விஸ்வரூபம் காட்டிய நிலையில், அம்மையார்குப்பம் இளைஞர்கள் தங்களின் சொந்த முயற்சியில், கற்பனையில் உருவெடுத்த வித்தியாசமான விநாயகர் சிலைகள், பக்தர்களை வெகுவாக கவர்ந்தன.

வரவேற்பு: விநாயகருக்கு பிடித்தமான பொரி உருண்டை, பாதாம் கொட்டைமற்றும் உலர் பழங்களை கொண்டு, உருவாக்கிய சிலைகளில், மிளிர்ந்த இளைஞர்கள் கைவண்ணம், கற்பனை திறன், பகுதிவாசிகளிடையே பெரும் வரவேற்பை பெற்றது. அம்மையார்குப்பம், ஜி.எஸ்.டி., நகர் பகுதி இளைஞர்கள் களிமண் கொண்டு உருவாக்கிய விநாயகர் சிலைக்கு, அரிசி மாவில் காப்பு, அதற்கு உலர் திராட்சை, முந்திரி, பாதாம் கொட்டை மற்றும் செர்ரி பழங்களை கொண்டு அலங்கரித்திருந்தனர். ஐந்து தலை நாக கிரீடத்துடன் அருள்பாலித்த விநாயகர், சிவலிங்கத்திற்கு, மூன்று நாட்களாக தொடர்ந்து பாலாபிஷேகம் செய்து வந்தனர். இதற்காக, பிரத்யேக இயந்திரம் சிலையின் பின்புறம் அமைக்கப்பட்டிருந்தது. ஆனால், பக்தர்களின் பார்வைக்கு, விநாயகர் அபிஷேகம் செய்யும் காட்சி மட்டுமே தத்ரூபமாக தெரிய வந்தது. இதே போல், ஜி.எஸ்.டி.நகரின் வடக்கு பகுதியில், பொரி உருண்டை மற்றும் பழங்களை கொண்டு அமைக்கப்பட்ட விநாயகர் சிலையும் பகுதிவாசிகளை வெகுவாக கவர்ந்தது.

ஊர்வலம்: களிமண் கொண்டு வந்தது முதல், சிலை அமைத்து அரிசி மாவில் காப்பு போட்டது, பழங்களில் அலங்காரம் செய்தது என, மொத்தம் 48 மணி நேரம் செலவிட்டு, இளைஞர்கள் தங்களின் பக்தியை வெளிப்படுத்தினர். நேற்று முன்தினம் மாலை, 108 குத்து விளக்கு பூஜை நடத்தப்பட்டது. நேற்று மாலை, விநாயகர் சிலைகள், ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு, நீர்நிலைகளில் கரைக்கப்பட்டன.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ஸ்ரீரங்கம்: ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் வைகுண்ட ஏகாதசி ராப்பத்து உற்சவத்தின், 10ம் நாளான இன்று சந்திர ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை; திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், மஹா தீப கொப்பரையிலிருந்து சேகரிக்கப்பட்ட, ‘மஹா ... மேலும்
 
temple news
பாலக்காடு; கொல்லங்கோடு புலிக்கோடு ஐயப்பன் கோவில் ஆறாட்டு உற்சவம் கோலாகலமாக நடைபெற்றது.கேரள மாநிலம் ... மேலும்
 
temple news
ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் பிரியாவிடை நிகழ்ச்சி நேற்றிரவு நடந்தது. ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: வடகிழக்கு பருவமழை கொட்டித்தீர்த்தும், காஞ்சிபுரத்தில் கோவில் குளங்கள் சொட்டு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar