பதிவு செய்த நாள்
29
ஆக
2017
01:08
மயிலாடுதுறை: நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் நடைபெற உள்ள மகா புஷ்கர் விழாவிற்கான பத்திரிக்கையை வெளியிட்டு விழா நடைபெற்றது. புஷ்கரம் விழா குழுக்தலைவர் ராமானந்த மக ராஜ் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு துறவியர்கள் ஒருங்கிணைப்பாளர் சுவாமி வேதாந்த ஆனந்தா, வீரராகவ சுவாமிகள் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கோவை, பேரூர் இளைய ஆதீனம் தவத்திரு மருதாச்சல அடிகள் காவிரி மகா புஷ்கரம் விழா பத்திரிக்கையை வெளிட கும்பகோணம் ராமன் ராமன் மோட்டார் நிர்வாக இயக்குனர் சிவராமன் பெற்று க்கொண்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த பேரூர் இளைய ஆதீனம் மருதாச்சல அடிகள்: கங்கை, யமுனை, கோதாவரி, சரஸ்வதி போன்ற புன்னிய நதிகள் மயிலாடுதுறை து லாக்கட்ட காவிரியில் துலா மாதத்தில் புனித நீராடி தங்கள் பாவங்களை போக்கிக்கொண்ட புகழ்பெற்ற மயிலாடுதுறை துலாக்கட்ட காவிரியில் புஷ்கரம் விழா கொண்டாடுவது மிக வும் சிறப்பு, உலகில் வன்முறை நீங்கி அமைதியான வாழக்கை வாழ்வதற்கும், 64 சித்தர்கள் வாழ்ந்த இத்தலத்தில் வரும் செப் 12ம் தேதி முதல் 24ம் தேதி வரை நடைபெறும் புஷ் கரம் விழாவில் துலாக்கட்டம் காவிரியில் பக்தர்கள் புனித நீராடி தங்கள் பாவங்களை போக்கி இறையருள் பெற வேண்டும் என்றார். தொடர்ந்து கோவை பேரூர் இளைய ஆதீனம் தவத்திரு மருதாச்சல அடிகள் காவிரி துலாக்கட்டத்தில் நடைபெறும் மகா புஷ்கரத்திற்கான முன்னேற்பாடு பணிகளை பார்வைட்டார். இதில் தருமபுரம் வீரமாகாளி ஜெயசக்தி பீடம் காளிஸ்வரானந்த சரஸ்வதி சுவாமிகள், புஷ்கரம் விழாக்குழு செயலாளர் முத்துக்குமாரசாமி, துணைத்தலைவர் ஜெகவீரபாண்டியன், இணைச்செயலாளர் அப்பர்சுந்தரம் உட்பட பலர் கலந்துகொண்டனர்.