ஆனந்தம் இன்று ஆரம்பம் சொல்கிறார் பரமஹம்ச யோகானந்தர்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
09செப் 2017 05:09
* தெய்வீக சக்தியை நோக்கி மனதை திருப்பி விட்டால், வாழ்வில் இன்று முதல் ஆனந்தத்தை உணரத் தொடங்கி விடுவீர்கள். * மற்றவர்களின் உடல் பலம், பணபலத்தைக் கண்டு அஞ்சாதீர்கள். வெற்றி நோக்குடன் எதிர்நீச்சல் போடக் கற்றுக் கொள்ளுங்கள். * புதிய முயற்சியில் ஈடுபடும் போது, கடந்த கால அனுபவம் கற்றுத் தந்த பாடத்தை மறக்காதீர்கள். * தோல்வி என்பது தற்காலிகமான ஒன்றே. தன்னம்பிக்கையும், விடா முயற்சியும் இருப்பவனுக்கு வெற்றி கிடைத்தே தீரும். * கடவுளின் ஒப்பற்ற படைப்பாக இருக்கும் நம்மைப் போல வேறொருவர் உலகில் இல்லை. இதை எண்ணி பெருமிதம் கொள்ளுங்கள். * தினமும் இரவு தூங்கும் முன், அன்றைய நாளில் செய்த பணி அனைத்தையும் பட்டியலிடுங்கள். இது உங்களை திருத்திக் கொள்ளவும், பணி குறித்து திட்டமிடவும் தூண்டுகோலாக இருக்கும். * வேகத்துடன், விவேகத்தையும் மனதில் வளர்த்துக் கொள்ளுங்கள். இதுவே நெருக்கடி நேரத்தில் மனிதனுக்கு தக்க பாதுகாப்பாக அமையும்.