Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
கேரள முறைப்படி குமரியில் நேற்று ... ஸ்ரீரங்கம் காவிரி மகா புஷ்கரம் 2ம் நாள்: சந்தான கோபால கிருஷ்ண ஹோமம் ஸ்ரீரங்கம் காவிரி மகா புஷ்கரம் 2ம் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
காரைக்காலில் காவிரி மஹா புஷ்கரம்: பக்தர்கள் புனித நீராடினர்
எழுத்தின் அளவு:
காரைக்காலில் காவிரி மஹா புஷ்கரம்: பக்தர்கள் புனித நீராடினர்

பதிவு செய்த நாள்

13 செப்
2017
12:09

காரைக்கால்: காரைக்காலில் நேற்று துவங்கிய, காவிரி மஹா புஷ்கரம் விழாவில், ஏராளமான பக்தர்கள் புனித நீராடினர். காரைக்கால் மாவட்டத்தில், புண்ணிய நதியான காவிரியின் ஏழு கிளைகளான நண்டலாறு, நாட்டாறு, வாஞ்சியாறு, நுாலாறு, அரசலாறு, திருமலைராஜனாறு, பிராவடையானாறு ஆகிய ஆறுகள் பாய்ந்து, வங்கக் கடலை அடைகின்றன. ஸப்த சிந்து, ஸப்த கோதாவரி என்பன போன்று, இந்த ஏழு நதிகளும் ஸப்த காவிரி என போற்றப்படுகின்றன.

காசிக்கு அடுத்து, மிகவும் பவித்ரமான தர்ப்பை புல் ஸ்தல விருட்சமாக திகழும் திருநள்ளார், வாஞ்சியூர் ஆகிய இரு தலங்களும் காரைக்காலில் உள்ளது சிறப்பு வாய்ந்தது. இத்தகைய சிறப்பு வாய்ந்த காரைக்காலில், இந்து சமய அறநிலையத் துறை சார்பில், காவிரி மஹா புஷ்கரம்  விழா, திருநள்ளார் அகலங்கண்ணு பகுதியில் நேற்று துவங்கியது. இவ் விழா,  வரும் 24ம் தேதி வரை நடைபெற உள்ளது. எம்.எல்.ஏ., கீதா ஆனந்தன்,  கலெக்டர் கேசவன், துணை ஆட்சியர் பன்னீர்செல்வம் ஆகியோர் முன்னிலை  வகித்தனர். விழாவை அமைச்சர் கமலக்கண்ணன் தலைமை தாங்கி துவக்கி வைத்தார்.  அதையடுத்து, ஏராளமான பக்தர்கள் புனித நீராடினர். சிவகாமி அம்பாள், வைத்தியநாதர் சுவாமி பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.

காவிரி மஹா புஷ்கரம் என்பது, குரு பகவான், கன்னி ராசியில்  இருந்து, காவிரி நதிக்கு உரிய துலாம் ராசிக்கு மாறுகின்ற குரு பெயர்ச்சி  காலத்தில் கொண்டாடப்படும் விழாவாகும். புஷ்கர விழாவின்போது, காவிரியில்  நீராடுவதால் பிதுர் தோஷம், பிரம்மஹத்தி தோஷம் உள்ளிட்ட பல்வேறு தோஷங்கள்  நீங்கி, பஞ்சம் அகன்று, உலகம் சுபிட்சம் பெறும் என்பது ஐதீகம். காவிரி மகா புஷ்கரம், 144 ஆண்டுகளுக்குப் பின் கொண்டாடப்படுவது குறிப்பிடத்தக்கது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
இன்று சதுர்த்தி விரதம். முகுந்த, வர சதுர்த்தி. தை அமாவாசைக்கு பின் வரும் சதுர்த்தி வரசதுர்த்தி ஆகும். ... மேலும்
 
temple news
தொண்டாமுத்தூர்; வெள்ளியங்கிரி மலை ஏற, பிப்., 1ம் தேதி முதல் பக்தர்களுக்கு அனுமதியளிக்கப்படும் என, ... மேலும்
 
temple news
பழநி; பழநி முருகன் கோயில் நிர்வாகத்திற்கு கட்டுப்பாட்டில் உள்ள வடக்கு கிரி வீதியில் எழுந்தருளியுள்ள ... மேலும்
 
temple news
அயோத்தி (உ.பி.), குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, வரும் மார்ச் 19 அன்று அயோத்தி ராமர் கோயில் வளாகத்தில் ... மேலும்
 
temple news
பரமக்குடி; பரமக்குடி ஐ.டி.ஐ., எதிரில் மரக்காயர்பட்டணம் பகுதியில் சீதாராம சுவாமிகள் ஞான யோகானந்த ஆசிரமம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar