பதிவு செய்த நாள்
19
செப்
2017
12:09
மைசூரு: தங்க அம்பாரியை சுமக்கும் அர்ஜுனா மீது, மரத்தால் செய்யப்பட்ட அம்பாரியை சுமக்கும் பயிற்சி நேற்று நடைபெற்றது. தசரா ஜம்பு சவாரியில் பங்கேற்கும், 15 யானைகளுக்கு, தினமும் வெடி குண்டு பயிற்சி, பொது மக்கள் மத்தியில் நடமாடும் பயிற்சி அளிக்கப்பட்டு வந்தது. நேற்று காலை, 6:00 மணிக்கு, தங்க அம்பாரியை சுமக்கும் அர்ஜுனா யானை மீது, 750 கிலோ எடையுள்ள மணல் மூடை வைத்து, அதன் மீது, மரத்தாலான அம்பாரி வைக்கப்பட்டது. பின், யானைக்கு பூஜை செய்து, அரண்மனை வளாகத்திலிருந்து பன்னி மண்டபம் வரை அழைத்துச் சென்று, மீண்டும் அதே பாதையில், அரண்மனைக்கு அழைத்து வரப்பட்டது. இப்படி, மூன்று அல்லது நான்கு நாட்கள் பயிற்சி அளிக்கப்படும். இதே போன்று, கஜேந்திரா, அபிமன்யு, பீமா யானைகளுக்கும் பாரம் சுமக்கும் பயிற்சி அளிக்கப்படுவதாக, கால்நடை மருத்துவர், நாகராஜ் தெரிவித்தார். மரத்தால் செய்யப்பட்ட அம்பாரியை சுமந்து வந்த அர்ஜுனாவை, சிறியவர் முதல் பெரியவர் வரை கண்டு ரசித்தனர்.