கீழக்கரை: கீழக்கரை வாணியர் தெருவில் அரியசுவாமி கோயிலில் முளைக்கொட்டு விழா நடந்தது. கடந்த செப்., 8 அன்று காப்புக்கட்டுதலுடன் துவங்கியது. நாள்தோறும் மூலவர்களுக்கு அபிஷேக ஆராதனை செய்யப்பட்டது. வலம்புரி விநாயகர், அரியசுவாமி, சமயபுரம் மாரியம்மன் உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு பால்குடம், மயில்காவடி, அக்னிசட்டி எடுத்து பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர். நள்ளிரவில் ஏராளமான பக்தர்கள் பூக்குழி இறங்கினர்.ஏற்பாடுகளை தலைவர் ஜெயராமன், செயலாளர் கார்த்திகேயன், விழாக்குழுதலைவர் பாலகிருஷ்ணன், சுப்பிரமணியன் மற்றும் வாணிய செட்டியார் உறவின்முறை சங்கத்தினர் செய்திருந்தனர்.