Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கயிலாய கீழச்சொக்கநாதர் கோயிலில் ... ஆனந்தபுஷ்கரணியில் மகாளய அமாவாசை பூஜை ஆனந்தபுஷ்கரணியில் மகாளய அமாவாசை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பேரூரில் மகாளய அமாவாசை தர்ப்பணம்!
எழுத்தின் அளவு:
பேரூரில் மகாளய அமாவாசை தர்ப்பணம்!

பதிவு செய்த நாள்

20 செப்
2017
11:09

பேரூர் : மகாளய அமாவாசை தினமான நேற்று, பேரூர் படித்துறை நொய்யல் ஆற்றங்கரையில், முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து, மக்கள் வழிபட்டனர். புரட்டாசி மாத பவுர்ணமிமுதல் அமாவாசை வரையிலான, 15 நாட்களும் மகாளய பட்ச காலமாக கருதப்படுகிறது. இந்த நாட்களில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபடுவது ஐதீகம். மகாளய பட்சத்தின் கடைசி நாளான மகாளய அமாவாசை மிகவும் சிறப்பு வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. மகாளய அமாவாசை தினமான நேற்று, அதிகாலை, 5:00 மணி முதலே, பேரூர் நொய்யல் படித்துறையில் மக்கள் திரண்டனர். ஆற்றங்கரையில் புரோகிதர்களை கொண்டு காய்கனிகள் வைத்து வழிபட்டனர். பின்னர், அரிசி மாவு, சர்க்கரை, தேன், எள், பால் மற்றும் தயிர் ஆகியவற்றுடன் நெய் கலந்த பிண்டம் வைத்து தங்களது முன்னோருக்கு தர்ப்பணம் கொடுத்தனர். அதை, பல ஆண்டுக்கு பின், பெருக்கெடுத்தோடிய நொய்யல்

ஆற்றில் விட்டு, தங்களின் முன்னோர்களை நினைத்து வழிபட்டனர். ஆற்றங்கரையில் தர்ப்பணத்தை முடித்தபின், பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் நெய் தீபமேற்றி வணங்கினர். பேரூர் கோவிலின் உச்சிகால பூஜையில், மூலவர் பட்டீஸ்வரர், அன்னை பச்சைநாயகி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். அதேபோல், மேட்டுப்பாளையம் வனபத்ரகாளியம்மன் கோவில் மற்றும் அனைத்து இந்து சமுதாய சங்க நந்தவனத்தில், முன்னோர்களுக்கு படையலிட்டு திதி கொடுக்கும் நிகழ்ச்சிகள் நடந்தன.

பசுக்களுடன் கடைகள்!

தர்ப்பண வழிபாடுகளை முடித்துக்கொண்ட பொதுமக்கள் அகத்திக்கீரைகளை பசுக்களுக்கு வழங்குவது வழக்கம். இதனால், ஆற்றங்கரை முழுவதும் பசுக்களுடன் புதிதாக அகத்திக்கீரை கடைகள் அமைக்கப்பட்டிருந்தன. இதனால், பசுக்களை தேடி அலைய வேண்டிய அவசியம் மக்களுக்கு இல்லாமல் போனது. இருப்பினும் கூட்டம் அதிகரித்த நேரத்தில், இதனால் நெரிசல் ஏற்பட்டது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலில் நேற்று நடந்த கிருத்திகை விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம், வேகவதி ஆற்றங்கரையோரம், 16ம் நுாற்றாண்டின் விஜயநகரப் பேரரசு கால சதிகல் சிற்பம் ... மேலும்
 
temple news
பல்லடம்; பல்லடம் அருகே, ஹிந்து அன்னையர் முன்னணி சார்பில், மங்கள வேல் வழிபாடு நிகழ்ச்சி ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் உள்ள பல்லி சிலைகள் மாற்ற முயற்சி நடப்பதாக ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் பணாமுடீஸ்வரர் கோவில் கோபுரத்தில் வளர்ந்துள்ள அரசமர செடிகளால் சிற்பங்கள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar