Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கயிலாய கீழச்சொக்கநாதர் கோயிலில் ... ஆனந்தபுஷ்கரணியில் மகாளய அமாவாசை பூஜை ஆனந்தபுஷ்கரணியில் மகாளய அமாவாசை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பேரூரில் மகாளய அமாவாசை தர்ப்பணம்!
எழுத்தின் அளவு:
பேரூரில் மகாளய அமாவாசை தர்ப்பணம்!

பதிவு செய்த நாள்

20 செப்
2017
11:09

பேரூர் : மகாளய அமாவாசை தினமான நேற்று, பேரூர் படித்துறை நொய்யல் ஆற்றங்கரையில், முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து, மக்கள் வழிபட்டனர். புரட்டாசி மாத பவுர்ணமிமுதல் அமாவாசை வரையிலான, 15 நாட்களும் மகாளய பட்ச காலமாக கருதப்படுகிறது. இந்த நாட்களில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபடுவது ஐதீகம். மகாளய பட்சத்தின் கடைசி நாளான மகாளய அமாவாசை மிகவும் சிறப்பு வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. மகாளய அமாவாசை தினமான நேற்று, அதிகாலை, 5:00 மணி முதலே, பேரூர் நொய்யல் படித்துறையில் மக்கள் திரண்டனர். ஆற்றங்கரையில் புரோகிதர்களை கொண்டு காய்கனிகள் வைத்து வழிபட்டனர். பின்னர், அரிசி மாவு, சர்க்கரை, தேன், எள், பால் மற்றும் தயிர் ஆகியவற்றுடன் நெய் கலந்த பிண்டம் வைத்து தங்களது முன்னோருக்கு தர்ப்பணம் கொடுத்தனர். அதை, பல ஆண்டுக்கு பின், பெருக்கெடுத்தோடிய நொய்யல்

ஆற்றில் விட்டு, தங்களின் முன்னோர்களை நினைத்து வழிபட்டனர். ஆற்றங்கரையில் தர்ப்பணத்தை முடித்தபின், பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் நெய் தீபமேற்றி வணங்கினர். பேரூர் கோவிலின் உச்சிகால பூஜையில், மூலவர் பட்டீஸ்வரர், அன்னை பச்சைநாயகி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். அதேபோல், மேட்டுப்பாளையம் வனபத்ரகாளியம்மன் கோவில் மற்றும் அனைத்து இந்து சமுதாய சங்க நந்தவனத்தில், முன்னோர்களுக்கு படையலிட்டு திதி கொடுக்கும் நிகழ்ச்சிகள் நடந்தன.

பசுக்களுடன் கடைகள்!

தர்ப்பண வழிபாடுகளை முடித்துக்கொண்ட பொதுமக்கள் அகத்திக்கீரைகளை பசுக்களுக்கு வழங்குவது வழக்கம். இதனால், ஆற்றங்கரை முழுவதும் பசுக்களுடன் புதிதாக அகத்திக்கீரை கடைகள் அமைக்கப்பட்டிருந்தன. இதனால், பசுக்களை தேடி அலைய வேண்டிய அவசியம் மக்களுக்கு இல்லாமல் போனது. இருப்பினும் கூட்டம் அதிகரித்த நேரத்தில், இதனால் நெரிசல் ஏற்பட்டது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரம் குழந்தை வேலப்பர் கோயிலில் பழநிக்கு பாதயாத்திரை செல்லும் பக்தர்கள் ... மேலும்
 
temple news
 ராமேஸ்வரம்: ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் குஜராத் சோமநாதர் ஜோதிர்லிங்கத்திற்கு வாழும் கலை ... மேலும்
 
temple news
 நெல்லிக்குப்பம்: வேணுகோபால சுவாமிக்கு நடந்த தைல காப்பு வழிபாட்டில் ஏராளமானோர் கலந்து ... மேலும்
 
temple news
 கடலுார்: இலங்கையை சேர்ந்த தமிழர்கள், 96 பேர் இந்தியாவில் முழுவதும் உள்ள ஆன்மீக வழிபாட்டுத் தலங்களை ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில், சோழர் கால விஷ்ணு கற்சிலையை, வரலாற்று ஆய்வாளர்கள் கண்டெடுத்து ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar