பதிவு செய்த நாள்
22
செப்
2017
01:09
விருதுநகர்: நவராத்திரி விழா துவங்கியதை தொடர்ந்து விருதுநகர் கோயில்களில் கொலு வைக்கப்பட்டுள்ளது. இதையொட்டி அம்மன் தினமும் ஒவ்வொரு அலங்காரத்தில் வீற்றிருப்பார். இங்கு உள்ள வாலசுப்பிரமணிய சுவாமி கோயில், வெயிலுகந்தம்மன்கோயில், ஸ்ரீரெங்கநாத சுவாமி கோயில் உட்பட பல கோயில்களில் கொலு வைக்கப்பட்டுள்ளது. 10 நாளில் சூரனை வதம் செய்யும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. வாலசுப்பிரமணியர் கோயில் பட்டர் சுப்பையா, கோயில்களில் அம்மன் பார்வதி, மகாலட்சுமி, சரஸ்வதியாக கொலுவில் வீற்றிருப்பார்கள். பத்தாம் நாளான விஜயதசமி அன்று சூரனை வதம் செய்யும் நிகழ்ச்சி நடக்கும். பொதுவாக மூன்று, ஐந்து, ஏழு, ஒன்பது, 11 படிகளில் கொலு வைக்கப்படும். இதில் ஒவ்வொரு படியும் ஜீவன்களை உணர்த்தும் வகையில் உள்ளது. ஆறாம்படி ஆறு அறிவு படைத்த மனிதன், ஏழாம்படி ஞானிகள், எட்டாம்படி சித்தர்கள், கடைசிப்படி தேவலோகம், கைலாச நாதர் என இடம் பெறுவர், என்றார்.