Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news விருதுநகர் கோயில்களில் துவங்கியது ... கோவை சாரதாலயத்தில் நவராத்திரி விழா
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தமிழக சுவாமி சிலைகளுக்கு கேரளாவில் நவராத்திரி பூஜை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

22 செப்
2017
01:09

நாகர்கோவில்: நவராத்திரி விழாவுக்காக தமிழகத்தில் இருந்து கேரளா கொண்டு செல்லப்பட்ட சுவாமி சிலைகளுக்கு, மன்னர் குடும்பத்தினரின் மேற்பார்வையில் பூஜை நடக்கிறது. திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் தலைநகராக கன்னியாகுமரி மாவட்டத்தில் பத்மனாபபுரம் விளங்கியது. இங்குள்ள அரண்மனை வளாகத்தில் கவியரசர் கம்பர் வழிபட்டதாக நம்பப்படும் சரஸ்வதி சிலை உள்ளது. மன்னர் காலத்தில் நவராத்திரி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. பின், நிர்வாக வசதிக்காக திருவனந்தபுரத்துக்கு தலைநகர் மாற்றப்பட்டது. எனினும் பத்னாபபுரம் அரண்மனையில் உள்ள சரஸ்வதி தேவி சிலை பவனியாக திருவனந்தபுரம் எடுத்து செல்லப்பட்டு அங்கு நவராத்திரி விழா கொண்டாடப்பட்டது. அந்த மரபு இன்றும் மாற்றப்படாமல், நவராத்திரி விழா சிறப்பாக நடக்கிறது.

பத்மனாபபுரம் சரஸ்வதி தேவி, வேளிமலை முருகன், சுசீந்திரம் முன்னுதித்த நங்கை சிலைகள் திருவனந்தபுரம் சென்ற பின், பத்மனாப சுவாமி கோயில் அருகே பத்மதீர்த்தக்கரை நவராத்திரி மண்டபத்தில் விழா தொடங்குகிறது. 9 நாட்களிலும் காலையிலும், மாலையிலும் அலங்கார தீபாராதனை, அர்ச்சனை, நைவேத்யம் போன்றவை மன்னர் குடும்பத்தினரின் மேற்பார்வையில் நடக்கும். நவராத்திரி பூஜை நேற்று தொடங்கியது. செப்.,30-ல் வித்யாரம்பம் என்ற ஏடு தொடக்க நிகழ்ச்சி நடக்கிறது. அன்று இரவு, சரஸ்வதி அம்மனுடன் சென்ற வேளிமலை முருகன், செந்திட்டை கோயிலில் இருந்து கரமனை அருகே பூஜைப்புரை நவராத்திரி மண்டபத்தில் வேட்டைக்கு எழுந்தருளுவார். அக்.,1ல் நல்லிருப்பு என்ற விரத நிகழ்ச்சி நடக்கும். அக்.,2ல் திருவனந்தபுரத்தில் இருந்து புறப்படும பவனி அக்.,4ல் பத்மனாபபுரம் வந்தடையும்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி கோயிலில் கந்த சஷ்டி திருவிழா அக். 22ல் காப்பு ... மேலும்
 
temple news
கும்மிடிப்பூண்டி; கும்மிடிப்பூண்டி பிரசன்ன வெங்கடேச பெருமாள், கருட வாகனத்தில் வீதியுலா சென்று ... மேலும்
 
temple news
மானாமதுரை; மானாமதுரை அருகே இடைக்காட்டூரில் உள்ள சித்தர் இடைக்காடர் கோயிலில் நடைபெற்ற ஜெயந்தி ... மேலும்
 
temple news
திருப்பதி; ஒவ்வொரு ஆண்டும் தீபாவளிக்குப் பிறகு வரும் சதுர்த்தி தினம் நகுல சதுர்த்தியாக ... மேலும்
 
temple news
சிங்கம்புணரி; சிங்கம்புணரியில் கூவானை ஐயனார் கோயில் புரவி எடுப்பு திருவிழா நடந்தது.மதுரை மாவட்ட ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar