Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
திரிபுரசுந்தரி கோவிலில் இன்று ... விழுப்புரம் கோவில்களில் நவராத்திரி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருத்தணி அம்மன் கோவில்களில் நவராத்திரி விழா துவங்கியது
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

22 செப்
2017
01:09

திருத்தணி : முருகன் துணை கோவில்களான மத்துார் மகிஷாசுரமர்த்தினி அம்மன், காமாட்சியம்மன் உட்பட, ஐந்துக்கும் மேற்பட்ட கோவில்களில் நேற்று நவராத்திரி விழா துவங்கியது.

சிறப்பு பூஜை: திருத்தணி முருகன் கோவிலின் உபகோவிலான காமாட்சி அம்மன் உடனுறை சோளீஸ்வரர் கோவிலில், நவராத்திரி விழா, நேற்று மாலை துவங்கியது. இதையொட்டி, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடந்தது. தொடர்ந்து கோவில் வளாகத்தில் கொலு பொம்மைகள் வைத்து சிறப்பு பூஜைகள் மற்றும் தீபாராதனை நடந்தது. வரும், 30ம் தேதி வரை நவராத்திரி விழா நடைபெறும். அதே போல், திருத்தணி அடுத்த மத்துார் மகிஷாசுரமர்த்தினி அம்மன் கோவிலில், நேற்று மாலை நவராத்திரி விழாவை கோவில் தக்கார் ஜெய்சங்கர், இணை ஆணையர் சிவாஜி ஆகியோர் துவங்கி வைத்தனர். முன்னதாக, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது. தொடர்ந்து கோவில் வளாகத்தில் அமைத்த கொலு பொம்மைகளுக்கு சிறப்பு பூஜைகள் மற்றும் தீபாராதனை நடந்தது.

சொற்பொழிவு: தொடர்ந்து ஆன்மிக சொற்பொழிவு மற்றும் பரதநாட்டியம் நடந்தது. வரும், அக்.5ம் தேதி வரை, மொத்தம், 13 நாட்கள் நவராத்திரி விழா நடைபெறுகிறது. இது தவிர, மூலவர் அம்மனுக்கு தினமும் அபிஷேகம் மற்றும் ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு அம்மன் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். இதே போல் திருத்தணி மடம் கிராமத்தில் உள்ள படவேட்டம்மன், வனதுர்க்கையம்மன், பழைய பஜார் தெரு, அங்காள பரமேஸ்வரி அம்மன் உள்பட, 5க்கும் மேற்பட்ட அம்மன் கோவில்களில், நவராத்திரி விழா ஒட்டி கோவில் வளாகத்தில் கொலு பொம்மைகள் வைத்து சிறப்பு பூஜைகள் மற்றும் தீபாராதனை நடந்தது. இக்கோவில்களில் வரும், 30ம் தேதி வரை நவராத்திரி விழா நடைபெறும். இதற்கான ஏற்பாடுகளை அந்தந்த கோவில் நிர்வாகிகள் மற்றும் விழாக்குழுவினர் செய்து வருகின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தஞ்சாவூர்,  காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில், 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை அத்திவரதர் குளத்தில் ... மேலும்
 
temple news
திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலில் இன்று பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் துவங்கியது.திருத்தணி ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவிலில் மாசி பிரம்மோத்சவ விழா, இன்று காலை கொடியேற்றத்துடன் ... மேலும்
 
temple news
தூத்துக்குடி; திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் மாசி திருவிழா வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா ... மேலும்
 
temple news
திருவொற்றியூர்; தியாகராஜ சுவாமி கோவிலில், மாசி பிரமோத்சவ பெருவிழா நாளை கொடியேற்றத்துடன் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar