பதிவு செய்த நாள்
04
அக்
2017
11:10
திருப்பூர் : திருப்பூர், ஸ்ரீ விஸ்வேஸ்வர சுவாமி கோவிலில், நரசிங்க முனையரைய நாயனார் குரு பூஜை நேற்று நடந்தது. திருமுனைப்பாடி நாட்டை ஆண்ட குறுநில மன்னர் வழியில் வந்தவர், நரசிங்க முனையரைய நாயனார். சிவ தொண்டு புரிவதை சிறப்பாக செய்து வந்த அவர், திருவாதிரையன்று, சிவனுக்கு சிறப்பு பூஜை செய்து, உணவு படைத்து, நூறு பொன் கொடுத்து வந்தார். மன்னரிடம் பொருள் பெற வேண்டும் என்ற நோக்கில், உடல் நலம் கெட்ட நிலையில், திருநீறு அணிந்து ஒருவர் வந்தார். அருகில் இருந்தவர்கள், முகம் சுழித்து, அவரை ஒதுக்கிய நிலையில், நல் ஒழுக்கம் இல்லை என்றாலும், திருநீறு அணிந்தவர்களை ஒதுக்கக் கூடாது என்று கூறி, 200 பொற்காசுகள் கொடுத்து உபசரித்தார். சுந்தரமூர்த்தி நாயனாரை, சிறுவயது முதல் வளர்த்ததாலும், சிவபெருமான் அடிபணியும் நாயனார் ஆனார். அவரது, குரு பூஜை, திருப்பூர், ஸ்ரீ விஸ்வேஸ்வரசுவாமி கோவிலில், அர்த்தசாம பூசை சிவனடியார் திருக்கூட்டம் சார்பில் நடந்தது.